நறுந்தொகை மூலமும் உரையும்
1. எழுத்தறி வித்தவ னிறைவ னாகும்.
(பதவுரை)
எழுத்து - எழுத்துக்களை, அறிவித்தவன் - கற்பித்த ஆசிரியன், இறைவன் ஆகும் - கடவுள் ஆவான். ஒருவனுக்குக் கல்வி கற்பித்த ஆசிரியன் அவனுக்குத் தெய்வமாவான்.
(பொ-ரை)
எழுத்து முதலாகக் கற்பிக்க வேண்டுதலின் கல்வியை எழுத்து என்றார். ஆசிரியனைத் தெய்வமாகக் கருதி வணங்க வேண்டுமென்பது கருத்து.
------------------------------------------------------------------------------------------------------------
2. கல்விக் கழகு கசடற மொழிதல்.
(பதவுரை)
கல்விக்கு - (ஒருவன் கற்ற) கல்விக்கு, அழகு - அழகாவது, கசடு அற - குற்றம் நீங்க, மொழிதல் - (தான் கற்றவற்றைச்) சொல்லுதல்.
ஒருவன் கற்ற கல்விக்கு அழகாவது தான் கற்றவற்றைக் குற்றமறச் சொல்லுதல்
(பொ-ரை)
கசடு, ஐயம் திரிபு என்பன. ஒருவன் தான் கற்றவற்றை ஐயம் திரிபு இன்றியும், திருத்தமாகவும் பிறருக்குச் சொல்லவேண்டும் என்பதாம். [/c-
----------------------------------------------------------------------------------------------------
3. செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்.
(பதவுரை)
செல்வர்க்கு - பொருளுடையவர்க்கு, அழகு - அழகாவது, செழும் கிளை - நல்ல சுற்றத்தை, தாங்குதல் - பாதுகாத்தல். செல்வ முடையோர்க்கு அழகாவது, சுற்றத்தார் வறுமையுற்ற பொழுது அவரைப் பாதுகாத்தல்.
(பொ-ரை)
கிளைபோன்றிருத்தலின் சுற்றம் கிளை யெனப்படும். செழுங்கிளை யென்பது நல்ல உறவு என்றும், தமக்கு அழகைச் செய்யும் உறவு என்றும் பொருள்படும்.
--------------------------------------------------------------------------------------------------------
4. வேதியர்க் கழகு வேதமு மொழுக்கமும்.
(பதவுரை)
வேதியர்க்கு - மறையோர்க்கு, அழகு - அழகாவன, வேதமும் - வேதம் ஓதுதலும், ஒழுக்கமும் - நல்லொழுக்கம் குன்றா திருத்தலும் ஆம். செல்வ முடையோர்க்கு அழகாவது, சுற்றத்தார் வறுமையுற்ற பொழுது அவரைப் பாதுகாத்தல்.
(பொ-ரை)
கிளைபோன்றிருத்தலின் சுற்றம் கிளை யெனப்படும். செழுங்கிளை யென்பது நல்ல உறவு என்றும், தமக்கு அழகைச் செய்யும் உறவு என்றும் பொருள்படும்.
--------------------------------------------------------------------------------------------------------
5. மன்னவர்க் கழகு செங்கோன் முறைமை.
(பதவுரை)
மன்னவர்க்கு - அரசருக்கு, அழகு - அழகாவது, செங்கோல் முறைமை - நீதி செலுத்தும் முறைமையாம்.
அரசருக்கு அழகாவது நீதி செலுத்தும் இயல்பாம்.
(பொ-ரை)
நீதியானது செவ்விய கோல்போன்றிருத்தலின், அது செங்கோல் எனப்படும். தமது நாட்டை நீதியுடன் ஆளாதவர் அரசராகார் என்பதாம்.
வாழ்த்து
வாழிய நலனே வாழிய நலனே.
(பதவுரை)
நலன் - எல்லா நன்மைகளும், வாழிய - வாழ்க, நலன் - எல்லா நன்மைகளும், வாழிய - வாழ்க.
(பொ-ரை)
எல்லா நலங்களும் வாழவேண்டும்; எல்லா நலங்களும் வாழவேண்டும்.
----------------------------------------------------------------------------------------
நறுந்தொகை மூலமும் உரையும் முற்றிற்று.