FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Global Angel on November 06, 2011, 02:48:57 PM
-
நிழல் படம் எண் : 007
இந்த களத்தின் நிழல் படம் என்னால் கொடுக்கப்பட்டுள்ளது .. ..... இந்த அழகிய படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....
(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/007.jpg)
-
உன் நினைவுகள் எனும்
ஆணிகள் கொண்டு
என் இதய சிறகுகள்
சிலுவையில் அறையப்பட்டு
சிதிலமாய் கிடக்கின்றது ...
உன்னை உனக்காகவே
நேசித்தவள் ...
உன்னிடம்
உள்ளார்ந்த அன்பை மட்டும்
எதிர் பார்த்தவள் ..
உனக்காக பேசி
உனக்காக அழுது
உனக்காக கோபம் கொண்டு
உனக்காக சிரித்து
உன்னை நினைத்தே
வாழ பழகிவிட்டவள் நான்..
அறிந்து தெரிந்தும்
என்னை அணு அணுவாய்
வதைக்க உன்னால் மட்டுமே முடிகிறது..
ஒவொரு தடவையும்
உன்னால் காயப்பட்ட வடுக்கள்
உன் ஆறுதல் வார்த்தைகள் இன்றியே
அதுவாக ஆறி விடுகிறது
காரணம் உன் மேல் கொண்ட காதலால்
என்ன செய்தால் உனக்கு பிடிக்கும்
எப்படி நடந்தால் உனக்கு பிடிக்கும்
என்ன பேசினால் உனக்கு பிடிக்கும்
இதையெல்லாம் சிந்தித்தே
என் மூளையின் செயல்திறன்
அடிக்கடி ஓய்வுக்கு விண்ணப்பிகின்றது...
ஒவொன்றாக
உனக்காக பார்த்து பார்த்து செய்தாலும்
உன் பார்வையில் அவை
ஏனோ தீண்டத்தகாத செயல்கள் தான் ...
அதுதான் திரும்ப திரும்ப என்னை
சிதிலமாக சிதைகின்றாய்
உன்னை நேசிக்கும் என்னை
என்னை நீ நேசிகாது போனாலும்
என்னை காயப் படுத்தவாவது நீ வேண்டும்
அதனால்தான் உன்னை சுற்றி வருகிறேன் ..
என் இதயத்தை பார்
உன்னால் எத்தனை முறை
கிழிக்க பட்டாலும்
சிலுவையில் அறையப்பட்டாலும்
சிறகடிக்க முடியாது
சிறகுகள் சிறைவைகப்பட்டாலும்
துடிக்கத் தவிக்கிறது ..
அங்கே வாழ்வது நான் அல்ல நீதான்
உன்னால் அடிக்கப்படும்
ஒவோர் ஆணியும்
எனக்குள் இருக்கும் உனக்கு அடிபதுதான் ...
அதனால்தான் என் இதயம்
இன்னும் துடிக்கிறது
உன்னை காப்பதற்காய் ....
என் சிறகுகள் உதிருமுன் வா ...
என் ஜீவன் கருகுமுன் வா ..
என்றோ ஒரு நாள்
என்னிடம் நீ வருவாய்
அன்று உன் இதயத்தை
உன்னிடம் தந்து
உயர பறக்கும் இந்த உயிர் அற்ற இதயமும் ..
-
எதற்கு என்
சிறகுகளை சிறை வைத்தாய்
உன்னை மறக்க முடியாமல்தான்
உன்னை மறுபடியும்
சுற்றி வருகிறேன் ..
உன்னால் சுக்கலாக
கிழிக்கப் பட்ட
என் இதயத்தில்
காயத்தின் வடுக்கள்
ஆறுவதற்கு முன்னர்
அதன் மேல்
கூரிய ஆணி கொண்டு
குத்துகின்றாய் ...
என்னை நீ
நேசிக்காதது உன் உரிமையோ
அது போல்
உன்னை நேசிப்பது என் உரிமை ..
உன்னால் ஒரு நூறு
ஆணிகள் அடிக்கப்பட்டாலும்
உன் மேல் அசையாத
அன்புடன் நான் என்றும் ..
-
உன் விழி பார்வை பார்ப்பது அந்த ரோஜாவைய ,
அல்லாது அதன் பிம்பயாதிய ,
உனகுளே சக்தி இருக்கு ,அதை வைத்து வேண்டிடு
இந்த உலகை , ரோஜாவை முட்களால் காக்கும்
கடவுள் உனயூம் காப்பன்
வேண்ட்டு வாழ்வை வாழ்த்திடு, இந்த பூமயில் மனிதனாய் ,
இப்படிக்கு
அன்பன் பெர்னாண்டோ
-
சின்னச்சிறு வயது முதல்
கவலை தெரியாமல்
கபடு அறியாமல்
மனசுமை ஏதும் இல்லாமல்
குடும்ப பாரம் இன்றி
சுதந்திரமாய் சுற்றித் திரிந்தேன்
காலம் பருவம் என்ற பெயரில்
கனவுகளை வளர்த்தது
காதல் என்ற உணர்வு
சிறகு விரிக்கத் தொடங்கின
பருவ வயதில் காதலும்
ஒரு போதை தான்
போதை தலைக்கேறியதும்
யார் எது சொன்னாலும்
காது கேட்காது
நானும் அப்படித்தான்
காதலை எதிர்த்த பெற்றோரை எதிர்த்து
காதலனின் பின் ஓடினேன்
பூவில் தேன் குடித்த்ததும்
வண்டு பறப்பது போல
காமம் அடங்கியதும்
காதலனும் மறைந்து விட்டான்
சிறகுகள் பிய்க்கப்பட்டு
பறக்க வழியின்றி
பெற்றோரிடமே சரணடைந்த்தேன்
காதல் தந்த வலியை விட
இதயத்தில் ஆணியடித்தாற் போல
ஓடுகாலி என்ற பட்டம்
இதயத்தை சின்னாபின்னமாக்கியது
காதல் இனிமையானது தான்
அந்தக் காதல் உண்டாக்கும்
வலியும் வடுவும் கொடுமையானது