Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
தினம் ஒரு திருக்குறள்
« previous
next »
Print
Pages:
1
2
[
3
]
4
5
...
13
Go Down
Author
Topic: தினம் ஒரு திருக்குறள் (Read 22606 times)
எஸ்கே
Hero Member
Posts: 609
Total likes: 1566
Karma: +0/-0
Gender:
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு திருக்குறள் - 31
«
Reply #30 on:
January 31, 2022, 06:45:51 AM »
அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல்
குறள் 31:
சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
மு.வ விளக்கம்:
அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?
Logged
(2 people liked this)
தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்
எஸ்கே
Hero Member
Posts: 609
Total likes: 1566
Karma: +0/-0
Gender:
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு திருக்குறள் - 32
«
Reply #31 on:
February 01, 2022, 08:58:21 AM »
குறள் 32:
அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு
மு.வ விளக்கம்:
ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.
Logged
(2 people liked this)
தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்
எஸ்கே
Hero Member
Posts: 609
Total likes: 1566
Karma: +0/-0
Gender:
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு திருக்குறள் - 33
«
Reply #32 on:
February 02, 2022, 08:50:42 PM »
குறள் 33:
ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்
மு.வ விளக்கம்:
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.
Logged
(2 people liked this)
தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்
எஸ்கே
Hero Member
Posts: 609
Total likes: 1566
Karma: +0/-0
Gender:
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு திருக்குறள் - 34
«
Reply #33 on:
February 03, 2022, 07:54:34 AM »
குறள் 34:
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
மு.வ விளக்கம்:
ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை
Logged
(2 people liked this)
தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்
எஸ்கே
Hero Member
Posts: 609
Total likes: 1566
Karma: +0/-0
Gender:
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு திருக்குறள் - 35
«
Reply #34 on:
February 04, 2022, 07:27:51 AM »
குறள் 35:
அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்
மு.வ விளக்கம்:
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.
Logged
(2 people liked this)
தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்
எஸ்கே
Hero Member
Posts: 609
Total likes: 1566
Karma: +0/-0
Gender:
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு திருக்குறள் - 36
«
Reply #35 on:
February 05, 2022, 08:31:02 AM »
குறள் 36:
அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை
மு.வ விளக்கம்:
இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.
«
Last Edit: February 06, 2022, 03:25:24 PM by எஸ்கே
»
Logged
(2 people liked this)
தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்
எஸ்கே
Hero Member
Posts: 609
Total likes: 1566
Karma: +0/-0
Gender:
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு திருக்குறள் - 37
«
Reply #36 on:
February 06, 2022, 03:26:27 PM »
குறள் 37:
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை
மு.வ விளக்கம்:
பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.
Logged
(2 people liked this)
தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்
எஸ்கே
Hero Member
Posts: 609
Total likes: 1566
Karma: +0/-0
Gender:
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு திருக்குறள் - 38
«
Reply #37 on:
February 07, 2022, 08:54:57 AM »
குறள் 38:
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்
மு.வ விளக்கம்:
ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.
Logged
(2 people liked this)
தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்
எஸ்கே
Hero Member
Posts: 609
Total likes: 1566
Karma: +0/-0
Gender:
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு திருக்குறள் - 39
«
Reply #38 on:
February 08, 2022, 02:35:57 PM »
குறள் 39:
அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல
மு.வ விளக்கம்:
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை
.
Logged
(2 people liked this)
தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்
எஸ்கே
Hero Member
Posts: 609
Total likes: 1566
Karma: +0/-0
Gender:
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு திருக்குறள் - 40
«
Reply #39 on:
February 09, 2022, 11:00:56 AM »
குறள் 40:
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி
மு.வ விளக்கம்:
ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.
Logged
(2 people liked this)
தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்
எஸ்கே
Hero Member
Posts: 609
Total likes: 1566
Karma: +0/-0
Gender:
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு திருக்குறள் - 41
«
Reply #40 on:
February 10, 2022, 08:46:36 AM »
அதிகாரம் 5 – இல்வாழ்க்கை
குறள் 41:
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
மு.வ விளக்க உரை:
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.
Logged
(2 people liked this)
தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்
எஸ்கே
Hero Member
Posts: 609
Total likes: 1566
Karma: +0/-0
Gender:
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு திருக்குறள் - 42
«
Reply #41 on:
February 11, 2022, 05:10:30 AM »
குறள் 42:
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை
மு.வ விளக்க உரை:
துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.
Logged
(2 people liked this)
தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்
எஸ்கே
Hero Member
Posts: 609
Total likes: 1566
Karma: +0/-0
Gender:
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு திருக்குறள் - 43
«
Reply #42 on:
February 12, 2022, 11:12:49 PM »
குறள் 43:
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை
மு.வ விளக்க உரை:
தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.
Logged
(2 people liked this)
தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்
எஸ்கே
Hero Member
Posts: 609
Total likes: 1566
Karma: +0/-0
Gender:
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு திருக்குறள் - 44
«
Reply #43 on:
February 13, 2022, 10:53:54 AM »
குறள் 44:
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல
மு.வ விளக்க உரை:
பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.
Logged
(2 people liked this)
தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்
எஸ்கே
Hero Member
Posts: 609
Total likes: 1566
Karma: +0/-0
Gender:
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு திருக்குறள் - 45
«
Reply #44 on:
February 14, 2022, 09:09:09 AM »
குறள் 45:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
மு.வ விளக்க உரை:
இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.
Logged
(2 people liked this)
தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்
Print
Pages:
1
2
[
3
]
4
5
...
13
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
தினம் ஒரு திருக்குறள்