15
« Last post by Symphony on May 14, 2024, 02:33:40 AM »
ஆடுகளம்
இந்த மட்டை பந்து ஆடுகளத்தின் ஓவியத்திற்கு உயிர் ஊற்ற வந்துள்ளேன் நான் ஒன்றும் கவிஞன் அல்ல, சின்னஞ்சிறு பருவத்திலேயே விளையாடிய 11 உயிருள்ள ஓவியங்கள் விளையாடும் களமாம் இந்தக் களம், இக்காலமும்.. எக்காலமும்... மவுசு ஒன்றும் குறையாத பூங்காலம்! ரன்கள் எடுக்க துள்ளி குதித்து ஓடும் மான்களும் நாங்களே ! தத்தி தாவி பந்தை பிடிக்கும் மந்தியும் நாங்களே, தென்னை மட்டையில் பேட் செய்து விளையாடிய தருணங்கள் இன்றும் நெஞ்சில் நீங்கா நினைவலைகளாய் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது, பள்ளி பருவத்திலே எப்பொழுது ஞாயிறு வருமென்று காலண்டரின் நாட்களை எண்ணியதும் மறந்திடுமோ, கிரிக்கெட் ஒன்றும் பொழுதுபோக்கு அல்ல எங்களின் உயிரில் ஒன்றாக கலந்து விட்டது, ஒன்று மட்டும்தான் இன்று வரை விளங்கவில்லை பள்ளி தேர்வு கல்லூரி தேர்வுகள் வரும் காலங்களில் மட்டுமே தான் இந்த கிரிக்கெட் போட்டிகளை நடத்துகிறார்கள் போட்டியை பார்த்து விட்டால் எனது பிள்ளை பெயிலாகி விடுவானோ என்று டிவியை ஆப் செய்து விட்டு செல்லும் தந்தையின் செயலை பார்த்து விரோதி போல்பார்த்ததும் உண்டு.
பக்கத்து ஊரில் டோர்னமெண்ட்க்கும் பெயரை கொடுத்தாயிற்று.
வாகனம் ஒன்றும் கடன் வாங்கி சென்றது மறக்குமா,
முதலாக பெற்ற வெற்றி ஆனந்தத்தில் துள்ளி குதித்தோம்
திழைத்து வெற்றியின் களிப்பில் மகிழ்ச்சி அடைந்தோம் , அகவைகள் கடந்தாலும் இன்றளவிலும் இந்த மட்டை பந்து விளையாட்டு வீரர் என்ற பெருமிதம் கொள்வதில் நான் ஒன்றும் விதிவிலக்கல்ல, துள்ளித் திரிந்து விளையாட்டு விளையாடிய காலமும் மறக்கத்தான் முடியுமோ, இளைஞர் முதல் முதியவர்கள் வரை விரும்பும் ஓர் விளையாட்டு தான் இது, குதூகலமாக வெளியில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் கமான் சிக்ஸர் சிக்ஸர் என்று கத்தும் சத்தங்களும் விசில் சத்தங்களும் காதுகளில் இருந்து நீங்காத நினைவலைகளாக தான் தோன்றுகிறது, விசில் அடித்தும் கைத்தட்டியும் ஆரவாரம் செய்து ஊக்கப்படுத்தியதை கண்டு கர்வம் கொண்டு அவுட் ஆனதும் மறக்க முடியுமா என்ன? எவ்வளவோ விளையாட்டுகள் இருந்தாலும் இந்த கிரிக்கெட் பிடித்திருக்கிறது அடிக்கும் ரண்களும் எடுக்கும் விக்கெட்டுகளும் அடுத்த பந்தில் எப்படி என்ன மாறுமென்று கூற முடியா சுவாரஸ்யம் மிகுந்த ஓர் விளையாட்டு தான்!
ரன் எடுக்க ஓடி ஓடி வெற்றி கழிப்பை அடையவும் நாம் நம் பிள்ளைகளுக்கும் விதைகளை விட்டுச் செல்ல வேண்டும், ஆனால் சிறு பிள்ளைகளிடம் கணினியையும் செல்போனையும் கொடுத்துவிட்டு விளையாட்டு மைதானங்களை எல்லாம் பிளாட் போட்டு கட்டி விட்டு!
ஓடி ஆடி விளையாட வேண்டிய குழந்தைகளை எட்டுக்கு பத்து அறையிலே அடைத்து விடுகிறோம் நாம்!
ஊர்கள் தோறும் மைதானம் அமைப்போம் பிள்ளைகளின் மகிழ்ச்சியும் , கேம் சென்டர்களுக்கு அழைத்துச் செல்வதெல்லாம் வெற்று காகிதம் போன்றது தான்,
விளையாட்டு பருவத்தை கெடுத்து விட்டு என்ன சாதிக்கப் போகிறோம், இவன்(Symphony) இராஜூ மகிழ்வித்து மகிழ் வாழ்க வளமுடன்