தந்தையானவன்,
சில நேரங்களில் எனது தாயுமானவன் நீ!
என்னுள் ஒரு தேடலை விதைத்தவன் நீ !!
விரல் பிடித்து நடை பயின்ற
காலம் தொட்டு உன் நிழலில்...
வளர்ந்த எனக்கோ நீதானே
ஆதர்சநாயகன் !
என்றோ நீ ஸ்பரிசித்த மலரின்
மென்மையை பகிர்ந்து என்னையும்
மென்மையை உணர்ந்திடசெய்தாய்
இளவயதினில் நீ சந்தித்த
சோதனைகளையும் , வேதனைகளையும்
விவரித்து என்வாழ்வியல்
பாதைகளை எதிர்கொள்ள செய்தாய்
பள்ளிபாடம் விடுத்தது நீ ரசித்த
கம்பனையும் ,கல்கியையும் அறிமுகப்படுத்தி
எனக்கென்று உலகம் வியாபித்து தந்தாய்..
சில நேரங்களில் என் செயலால்
உனை இம்சித்தபோதும்... கோபம்கொள்ளமல்
தேவதை என தாங்கியவன்...
காலங்கள் கடந்து முன்னோக்கி போய்விட்டது..
மீண்டும் உன்வி ரல் கோர்த்து நடக்க
ஆசையாய் தேடுகிறேன்..
கரங்களை, விரல்களை...