8
« Last post by Vijis on April 28, 2024, 11:39:12 PM »
போதையில் ஆட்டம் பாட்டம் தான் இன்றைய சந்தோசம் இவர்களுக்கு
இன்றைய இளைஞ்ர்கள் இளம்பெண்கள் துள்ளி குதிப்பதே நடனம் என்கிறார்கள்
இளைய தலைமுறைகளை இணைக்க பல்வேறு நிகழ்ச்சில் நடனத்தை இணைத்து விடுகின்றன
அதன் உற்சாகம் இவ்வாறு கரைபுரண்டு ஓடுகின்றது
குடும்பம் உறவுகளை மறந்து வாழ்வின் குறிக்கோளை பறக்க செய்து
அழகான வாழ்வை அழித்து சாதிக்கும் வயதில் போதையில் அடிமையாயி
வாழ்வை இருளில் தள்ளி மரணம் அழைக்கும் விரைவில் என்பதை அறியாத தலைமுறை இவர்கள்
நமது நாட்டின் கலாச்சாரத்துக்கு உலகமெங்கும் தனி வரவேப்பு இருக்கும்
தமிழரின் மொழி நடனம் இசை உடை தமிழர்களின் மாறாத பண்பாடு
நடனம் நமது பாரத நாட்டின் சின்னங்கள் உடலையும் மனதையும் மகிழ்ச்சி படுத்தும் என்றார் அன்றைய கலைஞர்கள்
உண்மைதான் நடனத்துக்கு ஈர்க்கும் ஆற்றல் உண்டு பார்ப்பவர்களுக்கு விருந்து ஆடுபவர்க்கு மருந்து
இந்த புனிதமான நடனத்தை கோவில் திருவிழாக்களில் அரண்மனையிலும் நடத்தினார்கள்
அன்றைய காலத்து கலைகளின் வரலாற்றை மக்கள் மத்தியில் பரப்ப நடனம் தேவைப்படுத்தப்பட்டது
பழைய மிகுந்த நாட்டிய கலைகளை மறக்கவில்லை இன்றும் நம் மனது
இன்றைய தலைமுறை பெரும்பாலும் வெஸ்டன்யே ஆடுகின்றன
பாரம்பரியம் மாறாத நமது நாட்டின் நடனத்தை அழகாக ஆடுங்கள்
சரியான முறையில் வழி நடத்துங்கள்
இசையுடன் கூடிய நடனம் இனிமையான விருந்து கண்களுக்கு