வானத்தை நோக்கிய எனது பார்வை .,
என் சிந்தை கேட்கிறது நான் யாரென்று .,,
நான் யாரென்று சொல்வேன் ..?
என்னை எப்படி வரையறுப்பேன் .,,
இந்த சரீரம் எனக்கு சொந்தம் இல்லை.,,
நான் சிக்கியிருகிறேன் .,,ஆமாம்
சப்தம் இல்லாமல் சிக்கியிருகிறேன் .,,
ரகசியங்கள் எனக்கு கைகொடுக்கும்
எனக்குள்ளே ஒரு யுத்தம்
என் போராட்டம் பார்க்கபடுவதுமில்லை ..
சமுகத்தால் கேட்கபடுவதுமில்லை .,,
நீ அறிவாய் நான் மானுடம் என்பதை .,பின்
எதற்கென்னை நீ இப்படியாக்குகிறாய் ?
எதற்கிந்த வேஷம் ., ஏற்றுகொள்ள முடியவில்லை
உந்தன் மாறுபட்ட மனத்தால் .,,
ஏன் இந்த முடிவு.,, நானும் உயிர் ( பெண்) தானே !
நரம்புகளில் வேகமாய் ஓடும் ரத்த ஓட்டம் .,,
கண்ணீரில் பெருக்கெடுத்த கண்ணீர் துளி .,
நான் வாழ விளைகிறேன் .,,
அதிகம் என்ன கேட்டுவிட்டேன்.?
உனக்கு மட்டுமே தெரியும் .,,
எல்லாவகையிலும் நானும்
உன்னை போல் மனிதன் என்று,,