அன்று நண்பர்கள் தமிழ் அரட்டைக்குள்
அறிமுகமாகி ஆடிஎடுத்துவைத்தவுடன்
அழகாய் ஆதிமுதல் ஜோதியாய்
அஜ்ஜோதியையே ஆரத்தியாய் எடுத்தென்னை
அரவணைத்து வரவேற்ற அன்பானவள் ...
அற்றட்டை அறையில் மட்டுமின்றி ஆசை நான்
அரும் கவிதை பகுதியில், ஆசையாசையாய்
அழகழகாய் கவிதை புனைவதற்கு ஆசை பட்ட முன்னரே
அவள் பெயரை பதித்து அரைகுறை வர்ணனையில்
அழகாய் ஒரு கவிதை பதித்தேன் அன்றே ..
அரைகுறையாய் என்றாலும் அழகாய்தான் இருந்தது
அவள் பெயரை பதித்ததாலோ என்னவோ ?
அத்தகும் அருமை பெருமைக்குரிய பண்பானவள்
அறிமுகமாகா புதுமுகம் எனும் அச்சம்
அடி மனதின் அடியிலும் பதியாதபடி
அவ்வச்சத்தை அகற்றி மறைமுகம் ஆக்கிய
அழகு பிறைமுகம் பொருந்திய தரை நிலவவள்
அன்பானவள் ,பண்பானவள் ,அழகானவள்
அருமைக்கும் ,பெருமைக்கும் உரியவள்
இத்துனை சிறப்பிற்குரிய சிறந்தவள்
யாரவள்? யாரவள் ? யாரவள் ?
18 -02 அன்று - தன் தாய்க்கு
முத்தான மணிமுத்தாய் - தன் தந்தைக்கு
உயர் சொத்தான பெரும் சொத்தாய்
பிறந்தவள்(அணு) தான் அவள் ...
முத்தான முத்தின் பிறந்தநாளுக்கு
ஆண் பெண் என பாகுபாடின்றி
பல வகை பூக்கள் த்தம் பங்கிற்கு
பாராட்டே பாராட்டும் படி பாராட்டும்
பொன்னான பனி மலர்கள் தூவி
வாழ்த்துக்களை வாரி வழங்கிவிட்டதால்
பொறுத்து பொறுத்து ,பயந்து பயந்து
காய்ந்த இறகின் நுனியில் கரிதொட்டு
வாழ்த்து சொல்கிறது ஒரு சருகு ....
பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் !