IT RJ விற்கு வணக்கம்🙏
இந்நிகழ்ச்சி சிறப்பாகவும், வித்தியாசமகவும் உள்ளது. இந்நிகழ்ச்சியை மெருகேற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள்💐
இந்த முறை நான் தேர்வு செய்துள்ள பாடல் நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம் பெரும் "அழகாய் பூக்குதே".... எனும் பாடல்.
2009ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் பிருதிவிராஜ், பிரியாமணி, சக்தி,அனுஜா ஐயர் மற்றும் பலர் நடித்துள்னர்.விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார்.. பாடலை எழுதியவர் கலைக்குமார். பாடியவர்கள் பிரசன்னா மற்றும் ஜானகி ஐயர் ஆவர்.
இப்படம் வெளிவந்த சமயம் இப்பாடல் ஒலிக்காத இடங்களே இல்லை..புதிதாய் காதலிப்பவர்களின் anytime fav Song இது.
முதன்முதலில் சன்னமாய் மலரும் காதலை கவிஞர் தன் பாடலில் கொட்டித் தீர்த்திருப்பார்... சில நேரம் சிரிக்கிறேன். சில நேரம் அழுகிறேன்....சிறுதுளி விழுந்து நிறைகுடம் ஆனாயே.... போன்ற வரிகள் எப்போதும் கண்ணோரம் ஈரம் வார்ப்பவை..இந்தப் பாடலின் காட்சி அமைப்பும் மிக அழகாக கொட்டித்தீர்க்கப் போகும் வானம் போல ரம்மியமானவை.. இப்பாடலைக் கேட்டு முடிக்கும்போது நம் மனம் முழுவதும் நிரம்பி வழிவது அன்பு... அன்பு ஒன்று மட்டுமே..
இந்தப் பாடலை எனது நண்பர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.. நான் ரசித்த இப்பாடலை நண்பர்களே நீங்களும் சற்றே ரசித்துக் கேளுங்கள்❤️