Author Topic: அர்த்தமுள்ள இந்துமதம்  (Read 11366 times)

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 76
« Reply #75 on: January 21, 2022, 10:51:58 PM »

நிச்சயதார்த்தம் நடந்தபின் துக்க வீட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்கிறார்களே? காரணம் கூறவும்.

திருமணத்தை ஆயிரம் காலத்துப்பயிர் என்று பெரியவர்கள் சொல்வர். வாழ்வில் வரும் சுப நிகழ்வு என்றாலே அது திருமணம் தான். திருமணச் சடங்குகளை சாஸ்திரம் "விவாக தீட்சை' என்றே குறிப்பிடுகிறது. அக்னி முன் செய்யப்படும் மணச்சடங்கின் மூலம் மணமகன், மணமகள் இருவரும் இணைந்து வாழத் தொடங்குகின்றனர். மந்திரப்பூர்வமாக செய்யப்படும் இவ்வைபவம் தம்பதியரின் முன்னோர்களில் இருபது தலைமுறைகளைக் கரையேற்ற வல்லது. இதேபோல, சந்ததிகளுக்கும் நன்மை தரக்கூடியதாகும். இதனை, ""பூர்வே விம்சதி- பரே விம்சதி'' என்கிறது வேதம். கோயிலில் "அர்ச்சனை செய்கிறேன்' என்று சங்கல்பம் செய்து கொண்டால் அர்ச்சிக்கும்வரை சந்நிதியை விட்டு வெளியேறக் கூடாது. அதுபோல், திருமணம் செய்து கொள்கிறோம் என்று சங்கல்பம் செய்து கொள்வது தான் நிச்சயதார்த்தம். அதனால், திருமணம் முடியும் வரை துக்கவீடுகளில் கலந்து கொள்வதில்லை என்ற விரதத்தைக் கடைபிடிப்பது அவசியம்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 77
« Reply #76 on: January 22, 2022, 08:48:41 AM »

சுபவிஷயங்களை வளர்பிறையில் தொடங்குகிறார்களே! இது ஆன்மிகமா, அறிவியலா?

ஆன்மிகம்வேறு, அறிவியல்வேறு என்று பிரித்துப் பார்ப்பதை முதலில் விடுங்கள். ஆன்மிகம் காட்டும் வழியில் செல்வது தான் அறிவியல். பூமி உருண்டையாக இருக்கிறது என்று முதலில் கூறியது ஆன்மிகம். அதை உறுதிப்படுத்திக் கொண்டது அறிவியல். இன்றைய அணுசக்திவரை எல்லாவற்றிற்குமே அடிப்படை ஆன்மிகம் தான்.
அமாவாசைக்கு மறுநாள் வளர்பிறை தொடங்கும். ஒவ்வொரு நாளும் நிலவொளி அதிகரித்துக் கொண்டே போகும். இதனை சுக்லபட்சம்(வெண்மையான இரவு) என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பிறை வளர்ந்து வரும் நாளில் தொடங்கும் செயல்கள் நல்லபடியாக நிறைவேறும் என்பது ஆன்மிகம். வளர்பிறையில் இறுக்கம் குறைந்து நம் மனம் தெளிவுடன் செயல்படும் என்பதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. எச்செயலையும் தெளிவான புத்தியுடன் தொடங்குபவன் வெற்றி பெறுவது உறுதிதானே! ஆன்மிகமும் அறிவியலும் ஒன்றுக்கொன்று வேறுபட்டதல்ல என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 78
« Reply #77 on: January 23, 2022, 07:43:22 AM »

நவரத்தின மோதிரம் அணி வதைப்பற்றி விளக்கம் அளியுங்கள்?


மோதிரத்திற்கு "அங்குலீயகம்' என்று பெயர். இதற்கு "விரலுக்கு அணிவிக்கப்படும் ஆபரணம்' என்று பொருள். எல்லா தெய்வங்களுக்கும் எல்லாக் கற்களும் உகந்தவை தான். சுவாமியை பிரதிஷ்டை செய்யும் முன் பீடத்தில் நவரத்தினங்கள் வைக்கப்படுகின்றன. கும்பாபிஷேக கலசம், திருவாபரணங்களிலும் இவற்றுக்கு முக்கியத்துவம் உண்டு. அவரவர் விரும்பும் கற்களில் விருப்பமான முறையில் மோதிரம் அணிந்து கொள்ளலாம். அவை தீங்கு ஏதும் விளைவிக்காது. சுவாமி முன்பு வைத்து வணங்கியபிறகு அணிந்து கொள்ளுங்கள்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 79
« Reply #78 on: January 24, 2022, 08:50:59 AM »


விழா நாட்களில் முதல்நாள் இரவே வாசல் தெளித்து கோலம் போட்டு விடுகிறார்களோ? இது சாஸ்திரப்படி சரிதானா?

சூரிய உதயத்திற்கு ஒன்றைமணி நேரம் முன்பு தான் வாசலைத் தூய்மை செய்து சாணம் தெளித்து கோலமிடவேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. முதல்நாள் இரவே கோலமிட்டு விட்டு தூங்கிவிடுவது அவ்வளவு உசிதமானது அல்ல. அதிகாலையில் கோலம் இடும் வீட்டிலே திருமகள் நித்யவாசம் செய்வாள். இப்போது பிரம்மாண்டமான கோலங்களை எல்லாம் முதல்நாள் இரவே வாசலில் இட்டு அசத்துகிறார்கள். ஆனால், கூடியமட்டும் காலை நேரத்திலே வாசல் தெளித்து கோலமிடுங்கள்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 80
« Reply #79 on: January 25, 2022, 08:45:21 AM »

சுபவிஷயங்களை வளர்பிறையில் தொடங்குகிறார்களே! இது ஆன்மிகமா, அறிவியலா?

ஆன்மிகம்வேறு, அறிவியல்வேறு என்று பிரித்துப் பார்ப்பதை முதலில் விடுங்கள். ஆன்மிகம் காட்டும் வழியில் செல்வது தான் அறிவியல். பூமி உருண்டையாக இருக்கிறது என்று முதலில் கூறியது ஆன்மிகம். அதை உறுதிப்படுத்திக் கொண்டது அறிவியல். இன்றைய அணுசக்திவரை எல்லாவற்றிற்குமே அடிப்படை ஆன்மிகம் தான்.
அமாவாசைக்கு மறுநாள் வளர்பிறை தொடங்கும். ஒவ்வொரு நாளும் நிலவொளி அதிகரித்துக் கொண்டே போகும். இதனை சுக்லபட்சம்(வெண்மையான இரவு) என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பிறை வளர்ந்து வரும் நாளில் தொடங்கும் செயல்கள் நல்லபடியாக நிறைவேறும் என்பது ஆன்மிகம். வளர்பிறையில் இறுக்கம் குறைந்து நம் மனம் தெளிவுடன் செயல்படும் என்பதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. எச்செயலையும் தெளிவான புத்தியுடன் தொடங்குபவன் வெற்றி பெறுவது உறுதிதானே! ஆன்மிகமும் அறிவியலும் ஒன்றுக்கொன்று வேறுபட்டதல்ல என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 81
« Reply #80 on: January 26, 2022, 07:39:46 AM »


அரசமர விநாயகரை இருட்டிய பின்னும், காலை விடிவதற்கு முன்னும் வலம் வரக்கூடாது என்கிறார்களே! உண்மைதானா?

அரசமரத்தை விடியற்காலையில் சுற்றுவது தான் சிறந்தது, அந்த நேரத்தில் அரசமரத்திலிருந்து வெளிவரும் ஒரு வகையான மருத்துவ குணம் வாய்ந்த காற்று மலட்டுத் தன்மையை நீக்கும் வல்லமையுடையது.  இது போன்ற நல்ல விஷயங்களை எல்லோரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே விநாயகரைப் பிரதிஷ்டை செய்து அரசமரத்தடி விநாயகராகவும், அரசு, வேம்பு திருணம் நடத்தி வைத்து அஸ்வத்த நாராயணராகவும் வழிபாட்டு முறைகளைமுன்னோர் வகுத்திருக்கிறார்கள்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 82
« Reply #81 on: January 27, 2022, 08:33:20 AM »

கோயிலில் மற்றவர் ஏற்றிய விளக்கில் நாம் விளக்கு ஏற்றலாமா?

பிறர் ஏற்றிய தீபம் என்பதால் அதற்கு ஏதாவது தோஷம் ஏற்படாது. அதுபோல, நாம் தீபம் ஏற்றினால் நமக்கு கிடைக்கவேண்டிய பலன் பிறருக்கும் போய்விடாது. சிவன் கோயில் சந்நிதியில் தீபம் எரிந்து கொண்டிருந்தது. ஒரு எலி அந்த விளக்கில் இருந்த நெய்யைக் குடிக்க வாயை வைத்தது. எதிர்பாராமல் எலியின் வாய்பட்டு அணைய இருந்த திரியில் சுடர், தூண்டப்பட்டு பிரகாசமாக எரிந்தது. இந்நிகழ்ச்சி பெரிய புண்ணியச் செயலாக அமைந்து, மறுபிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறந்தது. சுவாமி சந்நிதியில் விளக்கேற்றுவது தான் முக்கியமே தவிர மற்ற சந்தேகம் எதுவும் வேண்டாம்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 83
« Reply #82 on: January 28, 2022, 08:26:24 AM »

பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்தால் தான் நன்மை உண்டாகுமா?

பெயர் நட்சத்திரம் சொல்லி நமது வேண்டுகோள்களையெல்லாம் கேட்டால் தான் நன்மை உண்டாகும் என்றில்லை. ""வேண்டத்தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ'' என்கிறார் மாணிக்கவாசகர். நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது இறைவனுக்கு தெரியும். நாம் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. இன்பமும் துன்பமும் இறையருளால் தான் நிகழ்கின்றன. பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்வதை நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ளும் விதத்தில் பெரியோர்கள் வகுத்துள்ளனர்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 84
« Reply #83 on: January 29, 2022, 08:23:33 AM »

கர்ம வினைகளை இந்தப்பிறவியுடன் தீர்த்துக் கொள்ள வழி ஏதும் உண்டா?

கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டால் கர்ம வினைகள் நீங்கும் என்று தான் ஞானசம்பந்தர், பெரியாழ்வார் போன்றோர் கூறியுள்ளனர். எத்தனை பேர் இதனை முழுமையாக கடைபிடிக்கிறோம்? கர்ம வினைகள் என்பது என்னவென்றால் நாம் பல பிறவிகளில் செய்திருக்கும் பாவ புண்ணியங்களின் சேமிக்கப்பட்ட பலன்களாகும். அதாவது நாம் உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கியில் சேமிப்பது போன்றது. நம் பணம் முழுமையாக செலவாகும் வரை நமது வங்கிக் கணக்கு முடியாது. அதுபோல நமது கர்ம வினைகளின் பலா பலன்களை, அதாவது இன்ப துன்பங்களை நாம் அனுபவித்துத் தீர்க்கும் வரை, வினை சேமிப்பு தீராது. ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இறைவழிபாடு, தர்ம சிந்தனை, நற்செயல் இவைகளைச் செய்து வினை நீக்கம் பெறுவது தான் இப்பிறவியின் குறிக்கோள். மேலும் மேலும் தவறுகளைச் செய்து வினை சேமிப்பை அதிகப்படுத்துவதற்கு அல்ல.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 85
« Reply #84 on: January 30, 2022, 10:53:04 AM »

வழிபாட்டிற்கு காலை, மாலை இரண்டு வேளையில் எது சிறந்தது?


ஏதாவது ஒரு வேளையைக் கூறிவிட்டால் மற்றைய நேரங்களில் ஜாலியாகப் பொழுது போக்கலாமா? தெய்வ வழிபாட்டிற்கு நேரம் காலமே கிடையாது. ""நற்றவா உன்னை நான் மறக்கிணும் சொல்லும் நா நமசிவாயவே'' என்கிறார் சுந்தரர். மனத்தளவில் மறந்திருந்தாலும், நமது நாக்கு இறைவனுடைய திருநாமத்தைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது இதன் பொருள். ""நான் நடப்பது உனது ஆலயத்தை வலம் வருதலாகவும், உண்பது உனக்கு யாகம் செய்வதாகவும் ஆகட்டும்'' என்கிறார் ஆதிசங்கரர். வழிபாடு என்பது பூஜை செய்வது மட்டும் கிடையாது. எப்பொழுதும் தெய்வ சிந்தனையுடன் இருப்பதும் தான். காலை மாலை இருவேளையும் வழிபாடு செய்ய வேண்டும். எப்பொழுதும் இறைவனை மனதில் சிந்தித்தும், நாவினால் அவர் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டும் இருக்க வேண்டும்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 86
« Reply #85 on: January 31, 2022, 06:55:10 AM »

பவுர்ணமியில் சந்திரனுக்கு பூஜை செய்வது போல் மாதம் மாதம் சூரியனுக்கு வழிபாட்டு நாள் எது?

மேஷம் முதலான 12 ராசிகளில் சூரியன் சஞ்சரிப்பதையே 12 மாதங்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு ராசியில் சற்றேறக்குறைய 30 நாட்கள் சூரியன் சஞ்சரிக்கிறார். ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு சூரியன் பிரவேசிக்கும் நேரத்தையே மாதப்பிறப்பு என்கிறோம். மாத சங்கராந்தி என்றும் பெயருண்டு. தை மாதப்பிறப்பன்று மகரராசிக்குள் சூரியன் நுழைவதால், மகர சங்கராந்தி என்கிறோம். அதுபோல 12 மாதங்களிலும் மாதப் பிறப்பை சங்கராந்தி என்றே சொல்ல வேண்டும். அன்றைய தினம் சூரிய வழிபாடு செய்வது மிக நல்லது.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 87
« Reply #86 on: February 01, 2022, 09:55:35 AM »

பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்பதன் பொருள் என்ன?


ஒரு செயலைத் துவங்கினால் அதை நல்லபடியாக முடிக்க வேண்டும். இதற்கு நல்ல திட்டமும் மனஉறுதியும் தெய்வ பலமும் வேண்டும். திட்டமிடாமல், மன உறுதியும் இல்லாமல் ஒரு செயலைத் துவங்கினால் அதை முடிக்க முடியாமல் திண்டாடுவோம். அப்போது, பலரும் பலவிதமாக ஆலோசனை சொல்லி குழப்புவர். அப்போது, செயலைத் தொடங்கியவருக்கு அங்கும் இங்கும் தாவும் குரங்கு போன்ற மனநிலை ஏற்பட்டு, எடுத்த செயலை முடிக்காமலேயே விட்டு விடுவார்கள். ஒரு காரியத்தைச் செய்யத் துவங்குவது என்பதை பிள்ளையார் பிடிப்பது என்றும், அது சரி வர நடக்காமல் போனால் அங்குமிங்கும் தாவும் குரங்காய் முடிந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 88
« Reply #87 on: February 02, 2022, 08:48:25 PM »


அபிஷேகம் செய்யும் பொருட்களுக்கு ஏற்ப தனித்தனி பலன்கள் உள்ளதாகக் கேள்விப்பட்டேன் விளக்கம் தரவும்.

பொதுவாக இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பாவங்களைப் போக்கி புண்ணியத்தைத் தரவல்லது. இப்பிறவியில் பாவமே செய்யவில்லையே என்று கேட்கலாம். போன பிறவியில் செய்த பாவ புண்ணியத்தின் பலன் தான் இப்பிறவியாகும். அப்போது செய்த பாவங்களின் பயனாய் இப்பிறவி வாழ்க்கையில் துன்பங்கள் ஏற்படுகின்றன. இவை நீங்கி இன்பமாய் வாழ சுவாமிக்கு அபிஷேகம் செய்வது மிக உத்தமமாகும்.

தண்ணீர் அபிஷேகம் பாவம் நீக்கும். எண்ணெய் தரித்திரம் நீக்கும், பால் ஆயுள் விருத்திக்கு உதவும். தயிர் நோய் நொடிகளைப் போக்கும், பஞ்சாமிர்தம் வம்சவிருத்தியை உண்டாக்கும். விபூதி நல்லறிவைத் தரும். பழவகைள், இளநீர் பித்ரு சாபத்தை நீக்கும். சந்தனம், பன்னீர் லட்சுமி கடாட்சம் உண்டாக்கும்



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 89
« Reply #88 on: February 03, 2022, 07:58:37 AM »

.துளசி இலைகளை சில குறிப்பிட்ட நாட்களில் பறிக்கக் கூடாது என்பதன் காரணம் என்ன?


வில்வ மரத்தில் சிவபெருமானும், துளசியில் மகா விஷ்ணுவும் வசிக்கிறார்கள். திங்கட்கிழமை அதாவது சோமவாரம் சிவபெருமானுக்கு உகந்த நாள். எனவே, அன்றைய தினம் வில்வம் பறிப்பதில்லை. அதுபோல சனிக்கிழமை ஏகாதசி திருவோணம் போன்ற நாட்கள் மஹாவிஷ்ணுவிற்கு உகந்தவை. எனவே இந்நாட்களில் துளசி பறிப்பதில்லை.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 90
« Reply #89 on: February 04, 2022, 07:33:01 AM »

திருஷ்டி கழிக்க பூசணிக்காயை பயன்படுத்துவதன் நோக்கம் என்ன?

திருஷ்டி கழிக்க சூடம் ஏற்றி திருநீறு பூசுவது தான் வழக்கில் இருந் தது. பிறகு, பூசணிக்காய் பழக்கம் எப்படியோ வந்திருக்கிறது. காளி, பைரவர் போன்ற உக்ர தெய்வங்களுக்கு, மாமிசம் படைப்பதற்க பதிலாக, பூசணிக்காய் வெட்டி குங்குமம் தடவி பலி கொடுப்பது சாஸ்திரங்களில் உள்ள விஷயம். கன்னியாகுமரி மாவட்டத்திலும், கேரளாவிலும் இவ்வாறு செய்கின்றனர். மாமிசத்திற் பதிலாக இப்படிச் செய்வார்கள். கண் திருஷ்டியினால் ரத்தக்காயம் போன்றவை ஏற்படாமலிருக்க இதுபோன்ற பழக்கங்கள் வந்திருக்கலாம்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்