தமிழ்ப் பூங்கா > கவிதைகள்

மாங்கனி - வெங்கனியாள் கனிந்தாள் செங்கனியாய்

<< < (2/13) > >>

Global Angel:
நன்று நன்று ...



--- Quote ---வெண்ணிலா தேகத்தில்
மின்னலைப் பாய்ச்சியா ?
பொன்னிலா ? வைரப்பொடியிலா ?
எதில் படைத்தான் என்றே!
எண்ணிலா ஐயமெழும்
--- End quote ---

அருமையான உவமான உவமேயம் .... பெண்களை வர்ணிப்பதில்  ஆண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபணபடுத்தி இருக்கீங்க ..


--- Quote ---மங்காத ஒளிமலரின்
வடிவழகைக் கண்டால்
கொடுங்காமரும் கைகூப்பி
கும்பிட்டுதான் போவார்
அவ்வளவு தெய்வீகம்
அவளின் அழகில்..
--- End quote ---

என்ன அருமையான ஒரு கரு வெளிப்பாடு ... நன்று  நன்று


--- Quote ---அனிச்ச காலெடுத்து
இனிக்க நடந்த
நனிமகளை அவையோர்
பனிக்க தலைசாய்த்தனர்..
--- End quote ---


மோப்பம் குலையும் அனிச்சம்  ... அதாவது சிறு தூண்டளுக்கே சிலிர்த்து ஒடுங்க கூடிய பெண்மை ... என்ன அருமையான கவி ஆளுகை ...

பனிக்க தலை சாய்த்தனர் ... கண்கள் பணிக்க ... இந்த அன்பும் அழகும் கொண்ட நன்  மகள் துறவறம் பூண்டதால் .. கண்கள் பனிக்க  தலை வணங்கினார் .. ஆஹா அருமை ...


--- Quote ---நேரிழை துறந்து
மெய்தவம் பூண்ட
மெல்லியாள் இடை
ஒல்லியாள் அரசகட்டில்
--- End quote ---

அடுக்கு மொழியில் .. அழகாய் வர்ணனை ... மிகவும் அருமை ஆதி ...  தொடரட்டும் உங்கள் காவிய கவிப்பயணம் ...

ஆதி:
நன்றிங்க, ஒட்டித்தந்தமைக்கு இன்னொரு நன்றி

இது போன்ற படைப்புகளில்  தீராமல் பெய்கிற சிறபுஞ்சி மழை மாதிரி அடுக்காடுக்காய் இரவு மேகங்கள் நகர்கிற பெங்களூர் வானம் மாதிரி வடியாமல் விரிகிற சென்னை வெயில் மாதிரி வர்ணனைகள் கொட்டிக்கிட்டே இருக்க வேண்டும், இல்லையென்றால் உவப்பாக இருக்காது

இன்னொரு விடையம் சரித்திர கதை என்பதால் காட்சிகளை கண்முன் நிறுத்த பல விவரணைகள் தேவைப்படும்

தொடர்ந்து வரும் தங்களின் ஊக்கங்களுக்கு மிக்க நன்றிங்க‌

ஆதி:
அமர்க கட்டில்



புத்த மயிலைப்
புகழ்ந்து வரவேற்றான்

மோட்சம் குடிஇருக்கும்
மோகூரின் தேவியே
ஆட்சி ஏற்று
ஆளவந்த காவிநிலவே
வருக! வருக!

பழையன் பெற்ற
இளைய மகளே
விளையும் விடியலின்
விரியும் ஒளியே
வருக! வருக!~

கொற்றவன் பெற்றவன்
குலம் காக்க
உற்ற தவத்தோடு
வந்த உத்தமியே
வருக! வருக!

என்றே அண்ணவன்
பொன்னரசியை வணங்கி வாழ்த்தினான்..

பின்னே இவ்வாறு
பேசத் துவங்கினான்..

ஊழி செய்த
ஊறின் காரணத்தால்
வேலிப் போன்ற
வேந்தனை இழந்தோம்
ஆழிப் பெருங்கடலில்
அடையும் காவிரியில்
தாலிக் கட்டிய
தலைவனுடன் தென்னரசியை
இழந்தோம் நாங்கள்
அன்னை இல்லா பிள்ளையானோம்
அம்மா!

காரிட்ட நீரில் தழைத்த
காட்டுக் கொடியாய்
வேர்விட்டு வளர்ந்து
விருப்பிய வண்ணம் படர்ந்து
சீர்கெட்டு நம்குலம்
சிதைந்து போகக் கூடாது
என்றேப் பதைப்பதைத்து
எங்களை வழிநடத்த வந்த
மங்கள மணிநிலவே
சிங்க கட்டில் கொள்க என்றான்..

Global Angel:


மிக எளிய நடையில் சிறப்பாக இருக்கிறது ... நன்று ... இன்னும் நிறைய எழுதுங்கள் இந்த காவியத்தை அறிய ஆவலாய் உள்ளேன்

Anu:

--- Quote from: Global Angel on September 07, 2012, 12:22:03 AM ---

மிக எளிய நடையில் சிறப்பாக இருக்கிறது ... நன்று ... இன்னும் நிறைய எழுதுங்கள் இந்த காவியத்தை அறிய ஆவலாய் உள்ளேன்

--- End quote ---
naanum idhai vazhi mozhigiren aathi..

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version