ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 338
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
Updated on 26 Oct 2020:
நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக, உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் , 60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/338.jpg)
மீள்
தொலைவதும்
மீண்டும் மீள்வதும்
சுலபமாக செய்திடும்
ஒரு சிறிய இசை
செவிவழியே
மனவலியை தீர்க்கும்
உருவம் இல்லா மருந்து
இசை
நேர்த்திக்கடன் எதிர்பாராமல்
பூஜைகள் எதுவும் செய்யாமல்
ஒவ்வொரு பக்தனுக்கும்
வரம் தரும் இறைவன்
இசை
நம்மை அறியாமல்
சிலரின் மீட்டெடுக்க
முடியாத நினைவில்
மூழ்கியபின் விழிவழி வரும்
கண்ணீரை துடைக்கும் கை
இசை
எனக்கு அவளும்
ஒரு இசை தான்
பேச்சுத்துணை போல்
அவள்
என் பாட்டு துணை
நான்
நிகழ்த்தும் உரையாடல்களில்
அவள் செருமலே
என் பின்னணி இசை
அவள்
குறுஞ்செய்திகளில்
பாடல் வரிகள் வந்து வந்து போகும்
அவள்
இல்லாதபோதும் அவள் பாடல்கள்
என்னோடு கதைகதையாய் பேசும்
அவள் வழக்கு மொழியில்
அவள் தமிழில்
அவள் குரலில்
எனக்கு
அவளே இசை
அவளே மருந்து
இசை கட்டாயம்
நமக்கு மருந்துதான்
இடையில் வரும் வரிகள்தான்
நம்மை நோகடித்து விடுகிறது