முகம் தெரியா நட்பை வளர்க்க
முகநூலினும் மென்மையாய் ஒர் மன்றம்.
சஞ்சலங்கள்,சங்கடங்கள்,சர்ச்சைகளில்லா
முறையில் நெடுநாள் அழியா பதிவாக
வாழ்த்தை பதிவு செய்ய முயற்சியுடன்
உன் சிநேகிதன்.
மெல்ல துயில் கொள்ள நினைக்கும் வேளையில்,
அன்போடு எடுத்துரைத்த சக தோழியின்
உந்துதளுக்காய் அடியெடுத்து வைத்த நான்
வாழ்த்து பகுதி முழுமையும் கண்டு
ஒரு கணம் திகைத்து,சிந்தித்து..
வண்ண வண்ண அலங்காரங்களால்
வாழ்த்த இயலாவிடினும்
"வாழ்த்த வேண்டும் என்ற எண்ணம்"
ஒன்றையே வண்ண அலங்காரமாய் எண்ணி
உன் அறிமுகம் பெற்ற நண்பர்கள் வாழ்த்து சொல்ல
வரிசையில் நானும் உன் எதிர் காலம் சிறக்க வாழ்த்துகிறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோதம்.