ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 179
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/179.png)
உண்மையை உறங்க வைக்க.,
வலிமை பாடும் தாலாட்டு - கையூட்டு!
பதவியின் பலத்தை குறைக்க.,
பணம் செய்யும் வஞ்சம் - லஞ்சம்!
ஞாலம் தோன்றி நாமும் தோன்ற..
நம்மில் பலரும் ஆனார் ஆன்றோர்!
அவர் நம் வாழ்வை கட்டிலமைக்க..
ஆளுமை என்றொரு நிலையை கண்டார்!!
ஆளுமை கொண்டு அனைத்தையும் சீராய்.,
ஆக்கிடத்தானே எத்தனித்திருந்தார்.,
ஆளுமையின் கீழ் சீராய் நாடும் .,
நாளும் நலமாய் நகர்ந்தே செல்ல.,
நலம்தனை கெடுத்திட.,
நமக்கொரு எதிரியாய் .,
வந்த வினையின் பெயரே லஞ்சம்.
பொய்யையும் களவையும் பொதுவாய் நீக்கி.,
வாழ்ந்திட சொன்னதே அன்றொரு காலம்.
பொய்யும் ஒர்வகை வாய்மை என்றே.,
போர்க்கொடி தூக்குதே இக் கலிகாலம்.
பொய்யையும் களவையும் போன்றதே லஞ்சம்!!
என்றால் அதுவும் மிகையே இல்லை!
லஞ்சம் என்னும் அரக்கனை ஒழிப்போம்!
நெஞ்சம் நிமிர்த்தி பிறர்க்கென வாழ்வோம்!!
பொதுநலன் கருதி... உங்கள் பீன்.
[/b]