ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 186
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/186.jpg)
மனது மகிழ்வுறும்போது அடைத்த
சொத்தைப்பல் தெரிய சிரிக்கும் மனிதா ,
சோகத்தின் பிடியில் சிக்கினால்
கடவுளை நிந்திப்பதேன்... ?
உணவகத்தில் உன்கையில்
சுவைஇல்லையெனில் முதலாளியை பழிப்பதும்
பிடித்தமாயின் பரிமாறினவனுக்கு பரிசளித்து
கடைசில் சமைத்தவனை மறக்கிறோம் ....
இயற்கையின் படைப்பில் அதிசயங்கள்
ஆயிரம் படைத்தான் இறைவன்
பானை செய்ய தெரியா குயவன்
கோனை செய்து நாசமாகி நாளாயிற்று ...
இறைவனை நிந்திப்பானே
அவன் தான் நல்லவர்களாகிய
உங்களை படைத்திருக்கிறானே
நீட்டுங்கள் உதவிக்கரம் ...
சொத்தெழுதி வைக்கவேண்டாம்
நீ உண்ண கொதிக்கும் உலையில்
இன்னொருவனுக்கும் சேர்த்து சமை
எச்சிலிலை ஏந்தாமல்
பசித்தவன் புசிக்கட்டுமே ....
கொடுத்துப்பார் கொடுப்பதில் வரும்
மனநிறைவு வேறுஎதிலும் வராது
வயிற்றுப்பசி தீர்த்து அறிவுப்பசிக்கு
வழிவகுத்து தோள் தூக்கி விடு ....
கற்றெழுந்தால் கண்டிப்பாக
பிறருக்கும் அவன் தோள் கொடுப்பான்
கை கணினி என்ன உன்னை தாண்டி
விண்ணை தாண்ட எத்தனிப்பான் ...
எதை எதையோ மாற்ற துடிக்கும் மானிடமே !
நீ நினைத்தால் இல்லாமை இல்லாமல் போகுமே!
இறைவன் எழுதியதை மாற்றியமைக்கும்
வல்லமை உன்னிடமே உண்டு .....