FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on September 13, 2018, 12:44:58 PM

Title: நான் துரத்தவில்லை
Post by: Guest on September 13, 2018, 12:44:58 PM
நான் துரத்தவில்லை
நீதான் ஒளிந்து கொள்கிறாய்
நான் துவங்கியவன்
நீ முடித்துவைத்ததாய்
நினைத்துக்கொண்டுள்ளாய்....
நினைவுகளினின்றும்
அகல மறுக்கும்
ஆளுமை காதலுக்கும்
துரோகத்துக்கும்
மட்டுமே உண்டு....

நான் துரத்தவில்லை
நீதன் ஒளிந்து கொள்கிறாய்.....
Title: Re: நான் துரத்தவில்லை
Post by: SaMYuKTha on September 13, 2018, 01:16:55 PM
நினைவுகளினின்றும்
அகல மறுக்கும்
ஆளுமை காதலுக்கும்
துரோகத்துக்கும்
மட்டுமே உண்டு....

ரொம்ப அழகான உண்மையான  வரிகள்... கவி அருமை தொடரட்டும் உங்கள் கவிப்பயணம் dokku..
Title: Re: நான் துரத்தவில்லை
Post by: Guest on September 13, 2018, 09:11:07 PM
துரோகத்தின் வலி என்பது 'நீயுமா?' என்பதே..

நிராகரிப்ப்பின் வலி 'ஏன்?' என்பதாயும்,

தோல்வியின் வலி என்பது 'எனக்கா?' என்றும் நீளும்...

வலிகள் இருந்தாலும் பேரன்பில்  இம்மூன்றும் இருப்பதே இல்லை...