FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on September 13, 2018, 12:44:58 PM
-
நான் துரத்தவில்லை
நீதான் ஒளிந்து கொள்கிறாய்
நான் துவங்கியவன்
நீ முடித்துவைத்ததாய்
நினைத்துக்கொண்டுள்ளாய்....
நினைவுகளினின்றும்
அகல மறுக்கும்
ஆளுமை காதலுக்கும்
துரோகத்துக்கும்
மட்டுமே உண்டு....
நான் துரத்தவில்லை
நீதன் ஒளிந்து கொள்கிறாய்.....
-
நினைவுகளினின்றும்
அகல மறுக்கும்
ஆளுமை காதலுக்கும்
துரோகத்துக்கும்
மட்டுமே உண்டு....
ரொம்ப அழகான உண்மையான வரிகள்... கவி அருமை தொடரட்டும் உங்கள் கவிப்பயணம் dokku..
-
துரோகத்தின் வலி என்பது 'நீயுமா?' என்பதே..
நிராகரிப்ப்பின் வலி 'ஏன்?' என்பதாயும்,
தோல்வியின் வலி என்பது 'எனக்கா?' என்றும் நீளும்...
வலிகள் இருந்தாலும் பேரன்பில் இம்மூன்றும் இருப்பதே இல்லை...