ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 209
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(http://friendstamilchat.org/newfiles/0Latest/OU/209.png)
என் இறைவா , கேளாயோ
என் குமுறலை அனைத்து
உயிர்களும் இன்புற்றிருக்கவே
படைத்தாய் இப்பூவுலகை !!!
வெள்ளை காகிதத்தில் துளி மையில்
அதனழகு கெடுத்தார் போல்
மனிதனுக்குள் ஏன் விதைத்தாய்
பேராசையை ?
கல்வி தடையில்லை மனிதாபிமானத்திற்கு
முன்னே வழிகாட்டி ஆட்சி அமைத்து
அமைதி காத்து வாழ வழிவகுத்தனர் !!!
முன்னேறு நன்றே சென்றால்
பின்னெரு தானே வருமென நம்பி
தேநீர் வடிகட்டியதாய் பொய்யுரைத்தவனுக்கு
பதவி கொடுத்து அழகு பார்த்த
சில மடையர்களின் விளைவை பார்த்தாயா !!!
உயிர் துறக்கலாம், தாய் நாட்டிற்காக
பெருமை தான் எனக்கு /ஆனால்
சில ஊழல் பெருச்சாளிகளின் பேராசைக்கு
பலிகள் நாங்களா ?எங்குருதி குடித்து கொழுத்த
ஓநாய்களிடமிருந்து எவ்வனம் மீட்பேன்
என் தாய் திரு நாட்டை!!!
மீண்டும் அமைதிப்படை அம்மாவாசையிடம்
நாட்டை கொடுத்தால்
இழப்பதற்கு நம்மிடம்
ஏதுமிஞ்சாது !!!
என் தலைமுறைக்கு
என்ன விட்டு செல்ல போகிறேன் நான் ?
என் இறைவா , கேளாயோ !!!