இது ஒன்றும் புதிதல்ல..
காலம் காலமாய்
தொடர்ந்து வரும் ஒன்று தான்..
செழித்து வளர்ந்த காதலையும்
தூய நேசத்தையும் விழுங்கி
கொண்டு ஏப்பம் விடும்
விதி நடத்தும் துரோக நாடகமே இது...
பகைமை எனும் அரக்கனுக்கு
பலியாக்கப்பட்ட இதயங்களின்
சரித்திர சரிவு இது...
அப்போது தெரிந்திருக்காது
இவர்களுக்கு தாங்கள்
மறைந்தும் வாழ்ந்து கொண்டிப்போம்
என்ற உண்மையை..
உலக காதலுக்கெல்லாம்
தங்கள் காதல் அச்சாரமாகப் போகிறது
என்ற உண்மையை...
தங்களின் காதலைச் சொல்லியே
உலக காதல் வாழும், வளரும்
என்ற பேருண்மையை....
காதல் ஜெயிப்பது எல்லாம்
காதலர்கள் இணைவதிலே..
காதல் கதைகள் ஜெயிப்பது எல்லாம்
காதலின் தோல்வியிலும்
காதலர்களின் மரணத்திலுமே...
அப்படி ஜெயித்த விட்ட வரலாறு கண்ட காதல் கதைதான்
இவர்களின் உலக காதல் கதை...
இந்த பூமி இயங்கும்வரை
மலர்ந்து கொண்டுதான் இருக்கும்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்....
இப்படி சில ரோமியோ ஜூலியட்கள்
செத்துக்கொண்டும் தான் இருப்பார்கள்...
இப்படி சில ரோமியோ ஜூலியட்கள்
வாழ்ந்து கொண்டும் தான் இருப்பார்கள்...