கொத்தமல்லி விதை - 1/2 கிலோ
மிளகாய் வற்றல் - 300 கிராம்
சீரகம் - 200கிராம்
சோம்பு - 100கிராம்
மிளகு - 25கிராம்
வெந்தயம் - 25கிராம்
அரிசி - ஆழாக்கு
உளுந்தம்பருப்பு - 1/4 கிலோ
துவரம்பருப்பு - 1/4 கிலோ
பெருங்காயம் - 3 கட்டி
மஞ்சள் சில் - 3
கறிமசால்(கிராம்பு,அன்னாசிபூ,பட்டை,கல்பாசி எல்லாம் சேர்ந்து) - 15கிராம்
கொத்தமல்லி,மிளகாய்வத்தல்,மஞ்சள் மூன்றையும் வெயிலில் 2 மணிநேரம் காய வைக்கவும்.
மீதமுள்ள பொருட்களை எல்லாம் வெறும் வாணலியில் வறுத்து மாவு மிஷினில் கொடுத்து அரைத்து வைத்து கொள்ளவும்.
Note:
நான் சொன்ன அளவு பொருட்கள் உபயோகித்தால் 2 1/2 கிலோ அளவிற்கு மசால் பொடி கிடைக்கும்.இந்த பொடியை அனைத்து விதமான குழம்பிற்கும் உபயோகிக்கலாம். சாம்பாருக்கும் பயன் படுத்தலாம். அசைவத்திற்கும் உபயோகிக்கலாம். இந்த மசால் பொடியை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து கொண்டால் 6 மாதத்திற்கும் மேல் கெடாமல் இருக்கும்.