FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JasHaa on January 12, 2019, 09:45:46 PM
-
உன்பெயரை யாரேனும் உச்சரித்தால் - என்
நாவினில் நாளங்கள் நர்த்தனம் ஆடும்
உனைபார்த்ததும் படபடவென - என்
இதயம் தாளம் தப்பி துடிக்கும்
உனை என் கையினில் ஏந்தும் நொடி
உலகமே என் கைவசப்படும்
பளபளக்கும் உன் ஆடை, பூ போல - உனை
வருடி உன் மெய் தீண்டி ஸ்பரித்து சிலிர்த்துடுவேன்
என் இதழை நீ வருடும் நொடி எனைமறந்து
உன்னில் மூழ்கி தொலைத்துடுவேனே
என்நாவில் படும் முன்னமே நாவூறும்-பட்ட
பின்னே இன்சுவையால் எங்கும் இனிக்குதே ...
ஐயோ என் சாக்லேட் !!!
-
ஜஷா பேபி !:D ...செம செம ;) ... :D
-
அஹ்ஹ்ஹ்ஹ்ஹ் அண்ணீ 🍫 க்கு ஒரு சாக்லேட் கவிதை எழுதுதே 😍😘
-
உன் ரோஜா இதழ்கள்
என்னை மெதுவாக வருடுகையில்
நான் மெய்சிலிர்த்துப்போகிறேன்
என் பெயரை நீ உச்சரிக்கையில்
நீ மயங்கி போவதை ரசிக்கிறேனடி
என்மீது நீ கொண்ட காதல்
தீராதடி கண்ணே தீராதடி!
ஏனென்றால் நான் உன் ஸ்வீட் சாக்லேட்