FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JasHaa on January 12, 2019, 09:45:46 PM

Title: கனவு
Post by: JasHaa on January 12, 2019, 09:45:46 PM
உன்பெயரை யாரேனும்  உச்சரித்தால் - என் 
 நாவினில் நாளங்கள் நர்த்தனம்  ஆடும்

உனைபார்த்ததும் படபடவென - என்
இதயம் தாளம்  தப்பி  துடிக்கும்

உனை என் கையினில்  ஏந்தும்  நொடி
உலகமே  என் கைவசப்படும்

பளபளக்கும் உன் ஆடை, பூ போல -  உனை   
 வருடி உன் மெய் தீண்டி ஸ்பரித்து  சிலிர்த்துடுவேன் 

என் இதழை  நீ  வருடும்  நொடி எனைமறந்து
உன்னில் மூழ்கி தொலைத்துடுவேனே 

என்நாவில் படும் முன்னமே நாவூறும்-பட்ட
பின்னே இன்சுவையால் எங்கும் இனிக்குதே ...


ஐயோ என் சாக்லேட்  !!!

           
Title: Re: கனவு
Post by: RishiKa on January 12, 2019, 09:54:56 PM

ஜஷா பேபி !:D ...செம  செம ;) ... :D

Title: Re: கனவு
Post by: Guest 2k on January 16, 2019, 11:46:37 AM
அஹ்ஹ்ஹ்ஹ்ஹ் அண்ணீ 🍫 க்கு ஒரு சாக்லேட்  கவிதை எழுதுதே 😍😘
Title: Re: கனவு
Post by: SweeTie on January 17, 2019, 09:32:44 AM
உன் ரோஜா இதழ்கள் 
என்னை மெதுவாக வருடுகையில்
நான் மெய்சிலிர்த்துப்போகிறேன்
என் பெயரை நீ உச்சரிக்கையில்
நீ மயங்கி  போவதை ரசிக்கிறேனடி
என்மீது நீ கொண்ட காதல்
தீராதடி  கண்ணே  தீராதடி!
ஏனென்றால்  நான் உன் ஸ்வீட் சாக்லேட்