குடிகாரக் கணவன் நள்ளிரவு வீடு திரும்பினான்.
தான் குடித்திருப்பது மனைவிக்குத் தெரியக் கூடாது. தூக்கத்தில் உளறினாலும் அவளுக்குக் கேட்கக்கூடாது என்று நினைத்து பிளாஸ்திரி எடுத்து வாயில் குறுக்கும் நெடுக்குமாக ஒட்டிக் கொண்டு படுத்துவிட்டான்.
மறுநாள் காலை அவனை எழுப்பிய மனைவி , "என்ன நேற்றிரவு குடித்துவிட்டு வந்தீர்களா?" என்றாள்
"இல்லையே"
"அப்படின்னா முகம் பார்க்கும் கண்ணாடியில குறுக்கும் நெடுக்குமா பிளாஸ்திரியை ஒட்டி வெச்சது யார்?