பூக்களுக்குள்ளும்
பறவைகளுக்குள்ளும்
பூமியில் தோன்றும்
புதுப் புது உயிர்களுக்குள்ளும்
பகிரப்படும் பண்பு நிறை காதல்
பேசும் மொழி புரியாததால்
மனிதர் மனம் அறியவில்லை...!
கண் மூடி மவுனத்தை
கவிஞன் மனம் கவிதையாக்கும்...
காதல் அர்த்தம் அதற்குத் தெரியும்
காவியங்கள் படைத்து நிற்கும்....!
பிரிந்து உருவாக்கும்
புழுக்களுக்குள்ளும்
புனித காதல் ஒளிந்திருக்கும்.....
தன்னைத் தான் உணர்ந்து கொள்வதும்....
தங்கமான காதல் தோழி...!