தாயின் கருவில்
உயிரென உருவானேன்
நான் ...
எந்தன் மனமெனும்
கருவில் உறவென
பதிந்தவள் நீ ...
சிறகு முளைத்துப்
பறக்கத் தொடங்கினேன்
இவ்வுலகிலே நான் ..
மைத்திட்டா விழிச்
சிமிட்டலில்
சிறகையுடைத்துச் சிறைப்
பிடித்தவள் நீ ...
ராமன் எய்த அம்பில்
மயங்கினார் சீதை
என்றேன் நான் ...
வில் போல் வளைந்தப்
புருவத்திலிருந்து என்னிடத்தில்
அம்பை எய்தாய் நீ ...
காதல் வலையினில்
மாட்டிட வைத்தாய் நீ ..
சிக்கி மூக்கி கல்லின்
உரசல் போதும்
தீயை மூட்டவென்று
நினைத்தேன் நான் ...
உந்தன் இருவிழி
உரசலில்
எந்தன் நெஞ்சில்
அனலைத் தெறித்துச்
சென்றாய் நீ ...
தெறித்துச் சென்ற
அனல் இன்று
எரிமலையென
உருவெடுத்துள்ளது ...
இனியும் மூடி
மறைப்பதில் பயனேது ...
இன்றே சொல்லிவிடு
என்றது மனது ...
ஆதவன் அந்திசாயும்
வேளை - என்னவள்
உன்னருகினில் நான் ...
பட படக்கும் விழிகளோடு
என்னெதிரில் நீ ...
சுவாசிக்க மறந்தேன்
ஒரு கணம் நான் ...
சொல்ல வந்ததைச்
சொல்லி முடித்தேன்
ஒரு மூச்சினிலே நான் ...
ஏனோ மௌனம்
நீடித்தாய் நீ ...
உந்தன் ஒற்றைப்
பதிலுக்காக
காத்திருக்கிறேன் நான் ...
வாய் மொழி பேசாமல் ..
தலை அசைவினில்
மறுத்துச் சென்றாய் நீ ...
ஆனால் பெண்ணே,
மௌனம் நீடித்த பொழுதினில்
உந்தன் விழிகளோடு
கதைகள் பேசினேன் நான் ...
அதை மறந்தாயோ நீ ...
மைத்தீட்டா உந்தன்
மையல் விழியில்
மெய்யினை கண்டு
கொண்டேன் நான் ...
வாய்மொழியின்றி
உந்தன் கண்களில்
காதலை உணர்ந்தேன்
நான் ..
ஏதோவொன்றுத் தடுத்தது
உன்னை ...
அதை அறிந்தேன் நான்...
உந்தன் மறுப்பினில்
வாடிய ரோஜாவைப்
போல்
எந்தன் முகமது
வாடி இருக்கலாம் ...
நான்
கொண்ட காதல்
என்றும் வாடாது ...
உன்னில் நான் கண்ட
காதல் பொய்யென்றாகாது ..
எட்டதா உயரத்தில்
இருக்கலாம் நிலவு ...
நீ தீண்டும்
தூரத்தில் தான்
என் காதல் ...
நிச்சயம் ஏற்பாய்
ஒருநாள் நீ...
காத்திருப்பேன்
உன் சம்மதத்திற்காக நான்...
காத்திருப்பேன்
உந்தன் வருகைக்காக நான்..
நேரமெடுத்துக்கொள் நீ...
தாமதம் கொண்டாலும்
காத்திருப்பேன்
உன் நெற்றியில்
என் முதல் முத்தம்
பதித்திட நான் ...
ஆனால் கண்ணே ,
எந்தன் கல்லறை நாள்
வரை தாமதித்திடாதே ...
உந்தன் நினைவுகளோடு
இறைவனடி சேர
விரும்பவில்லை நான் ...
உன்னில் கலந்து
காதலை பகிர்ந்து
உயிருக்குள் உறைந்து
நெஞ்சில் உன்னைச் சுமந்து
உந்தன் கால் கொழுசின்
ஓசையில் முற்றிலும்
என்னைத் தொலைக்க
விரும்புகிறேன் நான்
எந்தன் தவ வாழ்விற்கு
வரமென வந்தவளே நீ
உந்தன் கரமதனைப் பற்றிட
ஏங்குகிறேன் நான்
கொடி ரோஜா மலர்கள்
பூத்துக்குழுங்க
காத்துக்கிடக்கிறேன்
எந்தன் இதய வாசலிலே...
உந்தன் வருகை ஒன்றுக்காய்....
நன்றி ...
ரித்திகா ...