வணக்கம் RJ, இந்த வாரமும் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் இடம்பெற்றது மகிழ்ச்சி. இந்த வாரம் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் நான் கேட்க விரும்பும் பாடல் "ஜானி" படத்திலிருந்து "என் வானிலே"
படம் : ஜானி
பாடல் : என் வானிலே
இசை : இளையராஜா
பாடியவர்கள் : ஜென்சி
பாடலாசிரியர்: கண்ணதாசன்
என்னவொரு க்ளாசிக்கான பாடல். க்ளாசிக் என்றால் பாடலும், இசையும் மட்டுமல்ல ரஜினியும், ஸ்ரீதேவியும் கூடவே அந்த Ambienceஉம். பியானோவையும் வயலினையும் குழைத்து என்ன ஒரு மென்மையான பாடலாக இளையராஜா கொடுத்திருப்பார். இந்த படத்தில் எல்லா பாடல்களுமே காலத்திற்கும் நிலைக்கும் அருமையான க்ளாசிக்ஸ். முக்கியமாக ஸ்னோரிட்டா பாடலில் அக்வாஸ்ட்டிக் க்ட்டரில் (Acoustic Guitar) அப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்தியிருப்பார்.
ஜென்சி!! என்ன ஒரு குரல். ஒரு பித்துநிலைக்கு நம்மை தள்ளிச் செல்லக்கூடிய அற்புதமான ஒரு குரல். ஜென்சியின் பாடல்களில் இது தான் பெஸ்ட், இது இல்லை என எதையுமே நாம் ஒதுக்கித் தள்ள முடியாது.
இந்த பாடலில் எனக்குப் பிடித்த வரிகள் என்று பொதுவாக எதுவும் குறிப்பிட விரும்பவில்லை, ஏனெனில் சற்றே சிறிய சரணங்களை கொண்ட பாடல் இது. ஆனாலும்
"நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை" என ஏறி இறங்கும் அந்த நொடியில் மனமும் சில்லென்ற நீர்பரப்பின் மேல் பறக்கும் ஒரு உணர்வை கொடுக்கும். அதே போல இரண்டாவது சரணத்திலும் "இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா" என வரும் இடத்தில் வெள்ளங்களும் ஒன்றல்லாவாவும் எப்படி இணந்து வரும் என நாம் நினைத்துக் கொண்டிருக்கும்போதே 'ஒன்றல்லவா' என்பதை முழுமையாக அந்த இடத்தில் முடித்திருப்பார் ஜென்சி. இந்த இரண்டு இடங்களும் எனக்கு ரொம்பவே பிடித்தமானது.
படத்தின் ஒலித்தடங்கள்,
1. என் வானிலே - ஜென்சி
2. காற்றில் எந்தன் கீதம் - எஸ். ஜானகி
3. ஸ்னோரிட்டா - எஸ்.பி.பி
4. ஆசைய காத்துல - எஸ்.பி.ஷைலஜா
5. ஒரு இனிய மனது - சுஜாதா
6. சேசிங் ம்யூசிக்
இந்த பாடல் என் உளறல்களை எப்பொழுதும் காது கொடுத்து கேட்கும் (நேரம் ஒதுக்கி கண் கொண்டு பார்க்கும்!) தோழர்கள் Paulna, Samyuu, Sockyy Frnduக்கு சமர்ப்பணம்
பேரன்பும் நன்றியும் RJ.