73
« Last post by Shahina on April 17, 2024, 11:59:35 PM »
அனைவரும் வணக்கம்
இந்த வாரம் நான் கேட்க இருக்கும் பாடல் மதராசபட்டினம் திரைப்படத்திலிருந்து" பூக்கள் பூக்கும் தருணம்"
இத்திரைப்படம் 2010-ம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வெளிவந்த ஒரு அழகான காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்க, ஆர்யா மற்றும் எமி ஜாக்சன் ஒரு முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சுவாரஸ்யமான காதல் மற்றும் தேசபதி கொண்ட திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படம், இந்திய ரசிகர்களின் பெரும் கவனத்தை பெற்றுள்ள படமாகும்.
பூக்கள் பூக்கும் தருணம் ....❤️❤️❤️
நேற்று வரை நேரம் போகவில்லையே.....❤️❤️❤️
பாடல் வரிகளும் ... பாடும் விதம் அவ்வளவு அழகு கேட்க...❤️❤️❤️
வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே....❤️
நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை இன்று இந்த நொடி போதுமே...❤️
காதலுக்கு மொழி தேவையில்லை என்பதை உணர்த்தும் நா. முத்துக்குமாரின் அருமையான பாடல் வரிகள்...❤️❤️
வேரின்ற விதையின்றி விண் தூவும் மழையின்றி இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே...❤️
ஏன் என்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல் இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே...❤️
எந்த உறவு இது எதுவும் புரியவில்லை எனற போதும் இது நீளுதே...❤️
கேட்கும் போதே நீண்டு கொண்டல்லவா இருக்கிறது 🥰
ஒரு வரி இரண்டு வரி அல்ல மொத்த பாடலுக்கும் உயிர் கொடுத்திருக்கிறது நா.முத்துகுமாரின் வரிகள்..❤️❤️
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் பயணம் முடிவதில்லையே....❤️
பாதை போல் உன் உடல் உலகை விட்டு மறைந்தாலும்
பயணம் போல் உன் தமிழ் வரிகள் என்றும் முடிவதில்லை....❤️
This song dedicated to my special one🥰 and my sweet glarina sis 😍and ftc friends 🤗
Thank you ❤️