விட்டு சென்றது நீ அல்ல
உன்னை விட்டு விட்டது நான் தான்
உன்னை அடைய நான் அலைந்தது நான் அறிவேன்
என் தனிமையை நீ அறிவாயா?
எப்போதும் காத்திருப்பாயே இப்போது எங்கே சென்றாய்,
அட! நீ தானே என்று இருந்தேன் நீ இல்லாத இந்த நிமிடம்
எல்லாமே நீ என்றுணார்ந்தேன்,
என் அழுகாய் என் சிரிப்பு என் கண்ணீர் என அனைத்தும் அறிந்தவள் நீ,
அழும் போது உன் மடி தந்து அன்னை என தேற்றியவள் நீ,
எட்டி மிதித்தாலும் எட்டி போகாதவள் நீ,
எட்டடியில் என்னை கண்டதும் குழந்தையாய் துள்ளி குதித்தவள் நீ,
அனாதையாய் வந்தவனுக்கு உறவேன பல கொடுத்தாய்
இன்று மட்டும் ஏன் தனிமையைய் பரிசளித்தாய்?
இந்நிலை இன்றே கடைசியாய் போகட்டும்
இனி ஒருபோதும் உன்னை நீங்க நிலை வரட்டும்,
வலிகள் ஆயிரம் இருந்தாலும் உன் வருகைக்காய் காத்திருக்கிறேன்
சீக்கிரம் வந்து விடு இரயிலே என் தனிமைக்கு துணையாய்...!❤️