ஒரு தலையான என் காதலுக்கும் ,எனக்கும்,
கற்பனை வடிவில்
என் கருவில் ஜனித்த என் மகனே....
புரண்டு படுத்தால் உனக்கு வலித்து விடுமே என்றுணர்ந்து ....
தூக்கத்தை தொலைத்த இரவுகளில் -கண்மணியே
உன் தந்தையின் மடியே...
என் தலையணையாய் போனதடா .......
உன் தந்தை குரல் கேட்டு என் வயிற்றில் நீயும் உதைக்க .....
உன் நுனி விரல் ஸ்பரிசத்திட்காக
நூறு ஒருமுறை நான் பிறந்திடுவேன் ....
என் மகனே ....
என் பல நாள் கனவே ...
உன் ஆசை முகம் நான் இன்னும் பார்க்க வில்லை ..
உன் பிஞ்சு குரல் இன்னும் கேட்க வில்லை ....
மேடிட்ட என் வயிற்றை உன் பிஞ்சு கால்கள் உதைகயில்...
சுவர்க்கத்தை நானும் கண்டேனடா ...
பல அணுக்களை வெற்றி கொண்டு...
பல தேசங்கள் நீயும் ஆள ..
அமைதியை உறங்கும் என் மகனே ...
உன் தந்தை குணம் கொண்டும் ,......
உன் தாயின் எழில் கொண்டும்,......
ஈரேழு உலகம் ஆள பிறந்திடுவாய் .....
என் மகனே....
தரணியில் நீ வந்து உதித்த பின்பு நானும்...
என் உதிரத்தை பாலாக ஊட்டி
என் தமிழ் மொழி தனை உன் செவி வழி ஊற்றி ....
உன் மழலை மொழி கேட்டு......
மகிழ்ந்திடுவேன் நொடிதோறும் ......
.
பூக்களின் வர்ணம் கொண்டு பிறந்தவனே........
உன்னிடத்தில் நான் சொல்ல
ஆயிரம் கதைகள் இருந்தும் ...,,
அத்தனை கதையிலும் ..
மன்னனாய் தேவதையாய் நீயானாய் ....
வானம் தாலாட்ட ,மேகம் சீராட்ட ..
வளர்வாய் என் தங்க நிலவே.....
பட்டினியாய் நான் கிடந்த போதும் ..
உறக்கமின்றி தவித்த போதும ...
வலி மிகுந்த வாழ்க்கையையும் உனக்காக கடப்பேனடா.....