ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 156
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(http://friendstamilchat.org//newfiles/OVIYAM UYIRAAGIRATHU/156.jpg)
அன்பால் கட்டி போட்ட காதல்
இன்று நம்மால் பேசப்படும்
காவியம் ஆனது ஏனோ..
அலைபாயும் மனதை
திருடி கொண்ட கள்வனே
வார்த்தையில் வர்ணித்த
உன் புதல்வி உந்தன் அன்பிற்கு
அடிமை ஆக்கினேன் இன்று...!!
அழகிய உந்தன் கையால்
என்னை அணைத்து காதல்பேசும்
உன் இதழ்கள்...
கட்டி கொண்டு காதல் செய்து
கட்டில் மேல் புது காவியம் ஆனதடி...
ரோமியோ கண்கள் சொன்ன கவிதையில்
கரைந்து போன ஜூலியட்...
அம்பிகாபதி அணைப்பில்
சிக்கிக்கொண்ட இதயம் அமராவதி...
கிருஷ்ணரின் குறும்பில்
மனதை பறிகொடுத்த ராதை
வரலாற்றில் பேசப்படும் காதல் கதைகள்....
காதல் செய்த உயிர்கள்
இந்த மண்ணில் இல்லை என்றாலும்
இவர்களின் உன்னதமான காதல்
இலக்கியமாய் வாழ்ந்துகொண்டேதான் இருக்கிறது..!!
கடவுளால் செதுக்க பட்ட
அழகிய சிற்பங்களுக்கு
உயிர் குடுத்த ஓவியம்
காவிய காதல்....
JesiNa :)