Author Topic: அரைத்து விட்ட சாம்பார் எப்படிச் செய்வது?  (Read 839 times)

Offline kanmani

துவரம் பருப்பு - 1 கப்,
வெண்டைக்காய் அல்லது வேறு காய்கறிகள் - 100 முதல் 150 கிராம் வரை,
வெங்காயம் - 1,
தக்காளி - 2, புளி - 1 சிறு உருண்டை,
பெருங்காயம் - சிறிது,
மஞ்சள் தூள் - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவைக்கேற்ப.

வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் - 6 முதல் 8,
தனியா - 1 டேபிள்ஸ்பூன்,
துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு - அரை டீஸ்பூன்,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
சீரகம் -அரை டீஸ்பூன்,
தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 4 டீஸ்பூன்.

தாளிக்க:
கடுகு, உளுந்து,
எண்ணெய் - தேவையான அளவு.
துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். காய்கறிகளை சுத்தம் செய்து நறுக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சிறு தீயில், காய்ந்த மிளகாய், தனியா, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, வெந்தயம், சீரகம், தேங்காய் துருவல் சேர்த்துப் பொன்னிறமாக வரும் வரை வறுத்து, ஆற வைத்து அரைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து வடிகட்டி, ஊற்றி, பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு, தக்காளி சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பித்ததும், காய்கறிகளை அதில் சேர்க்கவும். காய் நன்கு வெந்ததும், வேக வைத்த பருப்பைக் கரைத்து ஊற்றி, அத்துடன் அரைத்த விழுதையும் கரைத்து ஊற்றி, நன்கு கொதிக்கவிட்டு, இறக்கி, கடுகு, உளுந்து தாளித்துக் கொட்டவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.