என்னவளின் கரம் பிடித்து
ஊரை சுற்றிபார்க்க ஆசை
ஆனால் திருமணம் ஒன்று
நடந்தால் தானே ...உரிமையோடு
வளம் வரம் முடியும் ,
காதல் மயக்கத்தின் காரணம்
தினமும் நித்திரையில்
கனவுகள் நிறைந்தன,
சூரியன் ஓய்வு கொள்ளும் நேரம்
மெதுவாக இருள் சூழ்ந்தது ,
அவள் கரம் பிடித்து கடலோர
உல்லாசம், இது இன்றைய கனவு,..
கோடை காற்று இதமாக வீசியது
என்னவளின் நினைவுகளாய்,.
என் நெஞ்சம் நிறைந்த உருவமாய்,..
நினைவில் நீங்கா சீண்டல்களாய்,..
சிரித்து சிரித்து சிவந்து போன இதழ்கள்,
ஒற்றைகால் நடனமாடும் நாக்கு,
வாடை காற்றால் தாளம் போடும்
அவளது பற்கள்,
காதல் ராகம் பாடும் உதடு,
தேவதை போல திருமுகம்,
அபிநயம் நிறைந்த அழகுமுகம்,
காதல் சொல்லிடும் கன்னங்கள்,
ஜாடை பேசிடும் இமைகள்,
ஆண்களை கவர்ந்து இழுக்கும்,அவள் முகத்தின் அழகு
சிறப்பதால் செதுக்க படாத அவளின் இடைஅழகு,
அடர்த்தி நிறைந்த ஆறடி கரும் கூந்தலில்
ஒற்றை பின்னல் ஜடையில்,
சிரித்திடும் செவ்விதழ் ரோஜா,
பிறைநிலவுகள் ஜொலித்திடும் காதணியில்,
வட்டமிட்டு வளைக்கும் பொட்டு,
கோவை பழஇதழ்களின் கொந்தளிப்பு,
என்னிடம் வம்புவழக்கும்வைர விழிகள்,
அவளின் உயிரில் என் உயிரையும்
என் உயிரில் அவள் உயிரையும்
கலந்துவிட உல்லாசமாக வளம் வருகிறது
நினைவு என்னும் பதையில் ..
உள்ளத்தால் ஒன்று சேர்ந்த உயிர் ,
என்றுதான் உடலிலும் கலக்குமோ,....
என் பெரும் மூச்சுகளுடன் ,
ஏதேதோ எண்ணங்கள் என்னுள்ளே,
தொடரும் நினைவுகளாய்...