அடேங்கப்பா !
இத்தனை பாராட்டுக்களா ?
இத்தனை சீராட்டுகளா?
இத்தனை இன்பங்களா?
இத்தனை இனிமைகளா?
இடி தாங்கும் இதயம் கூட அடி (அளவு) மேல் அடியாய்
அன்பெனும் வெடியால் ,நீ தொடுக்கும் தாக்குதலை
தாங்க இயலாதே ?
நல் நெஞ்சுறுதி கொண்டவரும் கூட
கொஞ்சம் நெஞ்சுருகி போககூடுமே ?
நீ பாராட்டும் நபரின் வஞ்சமில்லா
நெஞ்சம் அதன்
நெஞ்ச நிலை என்னவோ ?