முதல் முதலாய் நரகத்தை
கூட ரசிக்க வைக்கிறாய்...
என்னை கொன்றுவிடு
மொத்தமாய் கொன்றுவிடு...
வேண்டும் என்று நெருங்கவும்
வேண்டாம் என்று விலகவும்
முடியாமல்
போராட்டம் என்னுள்...
எனக்கு நீயும்
உனக்காக நானும்
உன் மடிதனில் நான்
வாழும் வாழ்வு வைக்குமோ...
கலகத்தில் கலங்குகிறேன்
அனுதினமும்...
மனதை பூட்டுகிறேன்
உன்னை எனக்குள் வைத்து
என் மனதை பூட்டி விடுகிறேன்