ஒரு கவிதை எழுத
பல வரிகள் தேடினாலும்
நீ பேசும் மொழிக்கு
ஈடாவதில்லை என் கவிதை...
சில வாக்கியங்கள்
என் மனதில் பதிய
புதிய வாக்கியங்கள்
உன்னால் தோன்றியதே...
முகம் வாடும் மலராய்
நான் இருக்க
பிறை சூடும் நிலவாய்
நீ வருவாய்...
சிறகுகள் இருந்தும்
பறக்கவில்லை நான்
உனக்காக உலகை
அடைந்தேன்
சிறு துளியாக...