FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Global Angel on October 10, 2011, 02:03:42 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 002
Post by: Global Angel on October 10, 2011, 02:03:42 PM
                                நிழல் படம் எண் : 002  

இந்த களத்தின்  நிழல் படத்தை தோழி JS கொடுத்துள்ளார் ..... இந்த அழகிய இதயத்திற்கு   உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/002.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: JS on October 10, 2011, 02:51:10 PM
இந்த இதயம் துடிக்கும்
ஓசை கேட்கிறதா.. உன் பெயர் அதில்
கூண்டை விடு வெளி வந்த
பறவை போல என்னை விட்டு
வெளி வந்த போதும்
உன் ராகம் பாடுகிறதே...
அதை கையேந்தி நீ
தாங்குகையில் என்
அணுக்கள் உறைந்து
போவது ஏன்...
என்னை பிரிந்து வந்த
வலி கூட இல்லை
உன் அங்கம் அதை
தழுவதினால்...
உன் மூச்சுக் காற்றினால்
அதை மின்னச் செய்தாயடி...
பிரிந்து செல்ல வேண்டியவனை
அருகில் அழைத்து
உயிர் தந்தாயடி...
உன் இதயத்தை அதில்
இணைத்துக் கொடுத்தால்
என் ஆயுள் முடிந்தாலும்
உன் ஆயுள் வரை
உன்னுடன் இருப்பேனடி...
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: ஸ்ருதி on October 12, 2011, 02:38:28 AM

எனக்காக இதயம்
உனக்குள் துடிக்க
தனியாக துடிக்க
இன்னொரு இதயமோ.??


உனக்குள் இருக்கவே
என் மனம் ஏங்க
வேண்டாம் இதயம் என்னுள்...

உன் இதயத்தின் வேலையை
இருமடங்காக்கி விட்டேன்
எனக்கு சேர்த்து துடிக்கும்
நம்  இதயத்திற்கு
என் முத்தத்தை சத்தமாக்கி
விடவா?

எனக்காக நீ அங்கே துடிக்க
உனக்காக இங்கே
உயிர் வாழ்கிறேன்
உன்னை நினைத்து...

உன் இதயத்துடிப்பின்
ஓவ்வொருத் துடிப்பிலும்
என் காதல் உயிர் வாழ
காதலோடு காத்திருக்கிறேன்
உன்னோடு வாழ...

ஒரு நாள் ஏனும் உன்னோடு
உனக்காக உன்னவளாய்
உன் மடியில் உறங்கிடும்
வரத்தை தந்து விடு ..

உன் கரங்கள் எழுதும்
கவிதையாய் என்னை மாற்றிவிடு
உனக்குள் நான் இருப்பதை போல
எனக்குள் நீ வந்துவிடு..

வாழ்நாள் முழுதும்
உன்னோடு தொடர துடிக்கிறேன்
வாழும் காலம் வரை
உன்னையே நினைக்கிறேன்..

என் இதயமே
மௌனமொழி பேசி
என்னை வதைத்து விடாதே..
எல்லாவற்றையும்
தாங்கிக்கொள்ள
தற்போது என் இதயம்
என் வசம் இல்லை ;) :-* :P ;)
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Yousuf on October 12, 2011, 01:00:28 PM
இதயம் இல்லையேல் நாம் இல்லை
அந்த இதயத்தை பேணுவது நம் கடமை
இதை அறிந்தோர் வாழ்வார்கள் நெடுவாழ்வு
அறியாதோர் வீழ்வர்கள் படுகுழியில்...
புகைக்கும் மதுவுக்கும் அடிமையாகி
நம் உயிர்வாழ துணை செய்யும் உருப்புகலாம்
கணையம் இதயம் போன்றவற்றை
இழந்துவிட்டு கடைசியில் தவிக்க வேண்டாம்
வருமுன் காப்பது நம் கடமை
நம் இதயத்தை பாதுகாக்க உருதி ஏற்ப்போம்...!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Global Angel on October 12, 2011, 03:23:24 PM
இது நாள்வரை
என் நெஞ்சம் எனும்
இருள் அறையில்
உனக்காக துடித்த
என் இதயத்தை
இன்று உன் கைகளில்
தந்துவிட்டேன் ....

என்ன ஆச்சர்யம்
உன் கைகளில்
என் இதயம் ...
இழந்தும் ஒளிர்கின்றதே
இதுதான்
இழப்பில் ஓர் உயிர்ப்பா  ...?
இல்லை என்
காதலின் ஒளிர்வா ...

பளபளப்பாய் இருப்பதனால்
மிட்டாய் என நினைத்து
மென்று துப்பி விடாதே ..
என்றும் உனக்கு
இனிமையாய் இருப்பேன்
என்பதற்கு இதுதான் அடையாளம் ..
திருப்பி தந்துவிடதே ...
என் இதயமே
எனக்கு சுமையாகிவிடும் ..
எனக்கு தெரியாமல்
எங்காவது எறிந்துவிடு
உன்னிடம் என் இதயம்
உறங்காமல் ஒளிரும்
என்ற நின்மதி கிட்டும் ...

என் இதயத்தின் ஒளிர்வு
உன் கைகளில் சேர்ந்துதான்
என் வாழ்கையின் ஒளிர்வும்
உன் மெய்யது சேர்ந்தால்தான் ...
புரிந்து கொள்வாயா ...?
இல்லை புரிந்தும் கொல்வாயா ...?

Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: thamilan on October 14, 2011, 12:16:46 AM
இத‌ய‌ம் இல்லாத‌வ‌ன்
என்று சொல்ல‌மாட்டார்க‌ள்
என்னை இனி யாரும்

இத‌ய‌த்தில் நீ தான் இருக்கிறாய்
நான் சொன்ன‌ போது
ந‌ம்ப‌வில்லை நீ
இதோ என் இத‌ய‌ம்
நீயே பார்த்துக் கொள்

என் இத‌ய‌ம் துடிப்ப‌து
உன் பெய‌ர் சொல்லித்தான்
இப்போது கேட்கிற‌தா
அது உன் பெய‌ர் தான் என‌

என் காத‌லை சொன்னேன்
இத‌ய‌த்தில் இட‌மில்லை என்றாய்
இதோ இல‌வ‌ச‌மாக‌ வைத்துக் கொள்
என் இத‌ய‌த்தை
அதில் நிறைய‌ இட‌ம் உண்டு
உன்னைத் த‌விர‌ எவ‌ரும் இல்லை

இத‌ய‌ம்
வெறும் காற்றால் உயிர்
வாழ்கிற‌து என்று தானே நினைத்தாய்
அது அன்பாலும் உன் நினைவாலும்
வாழ்கிற‌து இப்போதாவ‌து புரிந்து கொள்