பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2023)
நண்பர்கள் கவனத்திற்கு,
எதிர் வரும் பொங்கல் தினத்தை முனிட்டு .. சிறப்பு கவிதை நிகழ்சிக்காக தங்கள் கவிதைகளை வழங்குமாறு கேட்டுகொள்கிறோம் ... நண்பர்கள் இணையதள வானொலியூடாக உங்கள் கவிதைகள் பொங்கல் தினத்தன்று தொகுத்து வழங்கப்படும். எதிர்வரும் புதன்கிழமை (11-01-2023) இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்பாக கவிதைகளை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சொந்தமாக எழுதப்படும் கவிதைகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும்.
பொங்கல் வாழ்த்து
தரையில் கால் படாமல் சுழல் நாற்காலியில் அமர்ந்து தட்டில் கை படாமல் கொத்தி கொத்திச் சாப்பிடும் நாம் நினைத்திராத ஒன்று; நம்மால் முடியாத ஒன்று - ஒரு நெல் சில மாதங்களில் எவ்வாறு நூறாகிறது ?
அந்த வானம் மழை பொழிந்தாலொழிய இந்த மண்ணில் விதை விழுந்தாலொழிய அதற்கு உழவன் பாடு பட்டாலொழிய நெல்லை சொல்லில் மட்டுமே காணலாம்.
பொங்கல் - வெறும் விடுமுறை நாளல்ல மனிதமும் இயற்கையும் உறவாடும் நாள் நாத்திகரும் நன்றியுடன் நமஸ்கரிக்கும் நாள் விஞ்ஞானியும் மெய்ஞானத்தில் மூழ்கும் நாள்.
அறுவடை பலனை அடையுமுன் அதற்கு உறுதுணையாய் இருந்த ஆதவன் முதல் ஆடு மாடுகளுக்கும் நன்றி கூறும் நன்னாளே பொங்கல்.
இந்த சிறப்புமிக்க பொங்கல் திருநாளில் நாமும் சிரத்தையுடன் நன்றி கூறுவோம் இயந்திர மயமான இக்காலத்திலும் உலகம் வாழ உழவு செய்வோர்க்கு !
[/i][/b] (https://friendstamilchat.net/chat/upload/private/user146762_d16e60486d87.gif)