ஆர்பரிக்கும் அலைகடல்
தூரத்தில் விளையாடும்
மங்கையர் கூட்டம்..
அலையோடு போட்டி போட்டு
துள்ளி குதிக்கும்
சிறு மழலைகள்
அனைவரும் ஆனந்தமாய்
அமைதியாய் நான்
நானும் ஆடியதுண்டு
அலைகடலில் அளவில்லாமல்..
அக்காவின் கரம் பிடித்து
அலையை கண்டு அலறும் என்னை
அன்பாய் பேசி பயத்தை நீக்கி
பற்றிய கரத்தை விடாமல் பிடித்து
கடலில் ஆனந்தம் ஆட்டம் போடவைத்து
பார்த்து ரசிப்பாள்....
கிளிஞ்சல்களும், கூழங் கற்களும்
அழகாய் சேகரித்து..
விளையாடிய காலமெல்லாம்
கண்முன்னே...
பெரும் அலை ஒன்று தூரத்தில் வர
அக்கா நான் அதில விழபோறேனு ஓட
வேண்டாமென துரத்தியவளை
போக்குகாட்டி அலையவைத்து
நெருங்கும் அலைகண்டு
ஐயோ என்று அலறி ஓடி
பெரும் அலை அடித்த அடியில்
இருவரும் அலையில் மூழ்கி
உப்புத்தண்ணீர் குடித்து
மூச்சுவாங்கி முங்கி எழுந்து..
எரிச்சலை தரும் கண்களை
துடைக்க எண்ணி கைகளை எடுக்க
அழுத்தி பிடித்தவாறு அக்காவின் பிடியில்
என் இரு கரங்கள்....
நனைந்த விழிகள்
மீண்டும் நனைந்தது
கண்ணீரில்...
என்னை கைப்பற்றி
காப்பாற்றிய கர்வத்தோடு அக்கா...
உயிர் தந்த அன்னையாகி
பாசம் தந்தவள்.
அமைதியாய் போனால்
என்னைவிட்டு..
இம்மண்ணை விட்டு...
நாம் சோ்ந்து சென்ற இடங்களுக்கு
எல்லாம் சென்று வருகிறேன்
நீ என்னோடு இருப்பதாக எண்ணிக் கொண்டு...
கூட்டம் கூடும்
கடற்கரையில் பல முகங்கள்
நான் தேடும் உன் முகம்
ஒருமுறை காணக் கிடைக்காதோ??
நனையாத ஈரத்தில்
நனைந்து போனது விழிகள்
உன் நினைவில்..