பதின்மவயது
மன்மதன் காதல் அம்பு எய்ய
பெண்களின் கொலுசு சத்தத்துக்கும்
கொஞ்சும் பேச்சுக்கும்
ஏங்கும் மனம்
அவளின் புன்முறுவல் போதும்
உணர்வு துணுக்குகளின்
பிரவாகம் பொங்கி வரும்
உன்னை பார்க்க ,
தொட , அணைக்க ,முத்தமிட என
காலங்கள் கடந்தன
இன்று
அது கடந்த காலங்கள் ஆகின
எல்லா துயரும்
உன் மடி சாய்ந்தால்
மறைந்துவிடும்
உன்னை பிரிந்த துயர் மறைய
என்ன செய்வேனோ
உயிரே என்றவள்
பிரிந்த பின்
உயிர் பிரித்தெடுத்த வலி தந்ததை
அனுபவித்தவருன்டா?
இல்லையெனில்
மன்மதன்
காதல் அம்பு எய்ய வரலாம்
ஓடி விடாதீர்
அனுபவித்துப்பார்
காதல் ஓர்
ரணமான வரம்
****JOKER***