நான் யார்?
நான் யார் என்பதை நீங்கள் எப்படி முடிவு செய்வீர்கள்?
என்னுடைய பெயர்,
என்னுடைய முகவரி,என்னுடைய படிப்பு,என்னுடைய தொழில்,
இது தான் நானா?
மேற்கூறிய அனைத்தையும் நான் சொன்னால் இது தான் நான் என்று நீங்களே ஒரு முடிவு செய்வீர்கள்,
உங்கள் முடிவில் எனக்கு ஒரு பிம்பத்தை கொடுப்பீர்கள் அந்த பிம்பம் நான் என நீங்கள் முழுவதும் நம்புவீர்கள்,
என்றாவது ஒரு நாள் நான் நானாக நடந்துக்கொள்ளும் போது
"அட நீ ஏன் பா இப்படி நடந்துக்குற"
"நீ பன்ற தொழிலுக்கு நீ இப்படி நடந்துக்கலாமா?
" எங்க ஊர்காரன இருந்து கிட்டு நீ இப்படி இருக்கியே"
"ஜாதி மானத்தையோ வாங்குறியே"
இது போன்ற வார்த்தைகள்
உங்களிடம் இருந்து வருமேயானால் நீங்கள் என்னை பற்றி கட்டமைத்த உங்கள் பிம்பம் அங்கே உடைக்கப்படுகிறது என்று பொருள்.
நான் என்பது என் பெயரோ,
என் முகவரியோ என் படிப்போ,என் தொழிலோ அல்ல....!
"நான் என்பது நான் மட்டுமே"
நான் உங்களிடன் பேசும் அந்த நிமிடம்
என்னை பற்றிய உங்களின் எண்ண வெளிபாடே நான்!