மறந்து போன வார்த்தைகளை
மொத்தமாய் சேர்த்து வைத்து
கொஞ்சம் தனிமையிலும்
கொஞ்சம் கவிதையிலும்
பேசி விட்டு போகிறேன்
-------------------------------------------------------------------------------
உன்னோடு பழகிய போது தான்
என் இதயம்
நட்பின் வலிமையை அறிந்துகொண்டது
உன்னோடு வாழ்ந்தபோது தான்
என் இதயம்
வாழ்க்கையின் தத்துவத்தை புரிந்துகொண்டது
இன்று
உன்னை பிரிந்தபோது தான்
என் இதயம்
பிரிவின் வலியை உணர்ந்து கொண்டது
------------------------------------------------------------------------
உன்னை போல் யாரும் என் மேல் அன்பு வைத்ததில்லை
உன்னை போல் யாரும என்னை இத்தனை விரிவாய் அறிந்ததில்லை .
உன்னை போல் யாரும என்னை சுகமாய் நெஞ்சில் ஏந்தியதில்லை
என்றும் உன் நினைவுகளுடன் இனிமேல் யாரும்
என்னை போல வாழப்போவதில்லை
----------------------------------------------------------------------------------
கார் மேகத்தை உனக்காக நான் தூது அனுப்புகிறேன்....
அது மழை பொழிந்தால்,
நீ புரிந்துகொள் உன் பிரிவால் நான் கண்ணீர் சிந்துகிறேன் என்று.....
அது மௌனமாய் உன்னை கடந்து சென்று விட்டால்,
அப்போது நீ உணர்வாய் உன் பிரிவால் என் உயிர் பிரிந்தது என்று!!!!
-----------------------------------------------------------------------------------