இசை தென்றல் நிகழ்ச்சியில் மீண்டும் இடம் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி.
இந்த வாரம் விஜய் அந்தோனி மற்றும் பிரகாஷ்குமார் அவர்களின் இசையமைப்பில் வெளி வந்த "அங்காடி தெரு" திரைபடத்தை இசையால் வெற்றி பெற்ற திரைப்படமாக குறிப்பிட விரும்புகிறேன்.
சென்னை ரங்கநாதன் தெருவை சுற்றியே கதை பின்னப்பட்டு இருக்கும் .சென்னையில் மிகப்பெரிய வியாபார நிறுவனங்களில் வேலைக்கு வரும் கிராமப்புற பணியாட்களின் கஷ்டங்களை சித்தரிக்கும் இந்த திரைபடத்தில் அனைத்து பாடல்களுமே ரசிக்கும் படியாக கொடுத்து இருப்பார் விஜய் அந்தோணி மற்றும் பிரகாஷ்குமார் அவர்கள். இந்த திரைபடத்தை இயக்கி இருப்பவர் வசந்த பாலன் . இதில் அறிமுக நடிகர்கள் மகேஷ் மற்றும் அஞ்சலி அருமையாக நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார்கள் .
2010 ஆம் ஆண்டு வெளி வந்த இந்த திரைப்படம் விஜய் விருதுகள்,2010 விகடன் விருது,நோர்வே தமிழ் திருவிழா விருது,தென்னிந்திய பிலிம விருது என பல்வேறு விருதுகளை வென்று இருக்கிறது . இந்த திரைபடத்தில் அனைவரும் ரசிக்கும் வண்ணம் அமைந்த "உன் பேரை சொல்லும் போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம் மற்றும் எங்கே போவேனோ " என தொடங்கும் பாடல்களை குறிப்பிடலாம்
இந்த வாரம் நான் விரும்பி கேட்கும் பாடல் பென்னி டயல் ,ஹம்சிகா இணைந்து பாடிய "கதைகளில் பேசும் " என தொடங்கும் பாடல். இந்த பாடலை FTC நண்பர்கள் அனைவருக்காகவும் விரும்பி கேட்கிறேன் .