மூங்கில் பூக்கள்..
இயற்க்கை நம்மை பல விதத்தில் வியக்க வைக்கிறது இயற்க்கை வியக்க வைத்த மூங்கில் பூக்கள் பற்றிய தகவல் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. படித்து தெரிந்து கொண்ட பல தகவல்களில் சிலவற்றை இங்கே எழுத வேண்டுமென தோன்றியது.
இந்தியாவில் மூங்கில் அதிகமாக விளையக் கூடிய தட்ப வெட்ப்பமும் இயற்க்கை சூழலும் நாட்டின் கடைக் கோடியில் அமைந்திருக்கும் அழகிய குளிர்ந்த மிசோரம் மாநிலத்திற்கு உண்டு.
மூங்கில் பூக்கள் ஐம்பத்து வருடத்திற்கு ஒரு முறை தான் பூக்கும் என்று சொல்லப் படுகிறது, 120 வகையான மூங்கில்கள் இருப்பதாக சொல்லப் படுகிறது. அழகிய பிங்க் நிறத்தில் இந்த பூக்கள் உள்ளது. மூங்கில் வளர்ப்பது வீட்டிற்கு அதிஷ்டம் என்ற ஒரு மூட நம்பிக்கையும் புதிய வரவாக நம்ம ஊரில் தற்போது காணப்படுகிறது, இந்த புதிய வரவு எந்த நாட்டின் தாக்கத்தால் ஏறப்பட்டிருக்க கூடும் என்று யோசித்தால் அது சீன ஜப்பான் நாட்டிலிருந்தோ அல்லது சிங்கப்பூர் போன்ற ஆசியர்கள் வாழும் நாடுகளில் இருந்து வந்ததாக இருக்கலாம். [ சிரிக்கும் புத்தர் சிலை போல ].
இந்த மூங்கில் பூக்கள் பூக்கும் அதே சமயத்தில் எலிகளும் அதிக அளவில் உற்பத்தியாகிரதாம். இதற்க்கு காரணம் எலிகள் இந்த பூக்களை சாப்பிடும் போது எலிகளின் உற்பத்தி பெருகுவதால் பயிர் விளையும் நிலங்களில் எலிகள் அதிக அளவில் பயிர்களை நாசம் செய்து விடுகிறது, இதனால் அதிக அளவில் உணவு பொருட்களுக்கு பஞ்சம் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் 1957,1819 ஆண்டுகளில் பெரிய அளவில் நாட்டில் பஞ்சம் வாட்டி எடுத்தாக வரலாறு கூறுகிறது.
இதனால் மூங்கில் பூக்கள் பூத்தாலே அது பஞ்சத்தின் அறிகுறி என்ற [myth] மூட நம்பிக்கை இருந்து வருகிறது. மூங்கில் பூக்கள் பூக்க போகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு காட்டிலாகாவில் உள்ள முக்கிய பணியில் இருப்பவர்கள் முன் கூட்டியே அறிந்து எலிகள் உற்பத்தியாவதை அதற்குரிய மருந்து வகைகளை தெளித்து அல்லது வேறு எலி ஒழிப்பு முறைகளை கையாண்டு, எலிகள் உற்பத்தியாவதை தடுக்கலாம், அப்படி அவர்கள் தக்க சமயத்தில் கவனம் செலுத்தவில்லை என்றால் பயிர்கள் எலிகளால் நாசப்படுத்தப்படுவதுடன் உணவு பற்றாக்குறை ஏற்ப்பட வாய்ப்பு அதிகமாகி விடுகிறது. தற்காலத்தில் எலி ஒழிப்பிற்கு பல ரசாயன கலவைகள் உள்ளது, எலிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் வேறு மிருகங்களும் அழிக்கப் பட்டு விட கூடாதல்லவா.
மூங்கில் பூக்களை அழிக்க முடியாது ஏனென்றால் அவற்றால் மூங்கில் விதைகள் உற்ப்பத்தியாகும் அந்த விதைகள் மூலம் மீண்டும் பல ஆயிரம் மூங்கில் மரங்கள் உற்ப்பத்தியாக வேண்டியது உள்ளது. பூக்கள் பூத்து முடித்த பின்னர் அந்த மூங்கில் புதர் தானாகவே பட்டு போய் விடுகிறது.