இன்றைய இளைஞர்கள்
நாட்டில் முதுகெழும்புகள்
மலையோ பனியோ
முட்டி மோதி தகர்த்திட துடித்திடும்
இளரத்தங்கள்
நஞ்சோ அமிர்தமோ
பருகிப் பார்த்திட நினைத்திடும்
இளம் பருவத்தினர்
ஆக்கமும் ஊக்கமும் கொண்ட
இளைஞர்கள் அழிவுப் பாதையில்
போவதும் ஏன்
நாகரீக மோகத்தால்
நகர வாழ்வின் மாற்றத்தால்
திசைமாறீப் போவதும் ஏன்
இன்றைய இளம் பெண்கள்
பாரதி கனவு கண்ட
புதுமைப் பெண்கள்
ஆணுக்கு நிகர் பெண்கள் -அதை
அறிவில் காட்டுவதை மறந்து
பார்களிலும் டிஸ்கொத்தேகளிலும்
ஆட்டம் போட்டு காட்டுகிறார்கள்
குத்துவிளக்காய் சுடர்விட வேண்டிய
பெண்களின்று கொலுவிளக்காய்.
நாகரீகம் செய்த கோலமல்லவா இது
பெற்றோர்கள் சிந்திய
வியர்வைத் துளிகள்
இன்றைய இளைஞர்கள் கையில்
மதுக்கோப்பைகளில் நிரம்பி வழியும் மதுக்களாக
பெற்றோரின் கனவுகள்
பொசுங்கி சாம்பலாகின்றன
போதைப் பொருட்களாக
மகாத்மா காந்திக்கு
வந்தே மாதரம் போல
இன்றைய இளைஞர்களுக்கு
'ஓபன் த பாட்டில்'
நாகரீகம் என்பது
கண்ணுக்கு பூசும் கண்மை போல
அளவோடு இருந்தால் அழகாக இருக்கும்
அளவுக்கு மீறினால்
அவலட்சணம் ஆகிவிடும்