உந்தன் ஒற்றைப் பார்வையில்
எனை தாக்கும் என் அழகு தேவதையே.
பார்ப்பதற்கு முன்பு ஒரு வார்த்தை சொல்லிவிடக்கூடாதா ? ...
நான் என்னை முழுவதுமாய் தயார்படுத்தி
உன் விழிகளில் விழுந்துவிட. ..
என்னை பன்முகத்தன்மை எடுக்க வைத்த பிரம்மன் நீ...
உந்தன் கூந்தலைக் காண்கையில் விவசாயி முகம் கொண்டேன்
உந்தன் நெற்றியை காண்கையில்
பழரச வியாபாரியாய் ஒரு முகமாய்,
உந்தன் கண்களைக் காண்கையில்
விண்வெளியாளனாய் உருக்கொண்டேன் ,
உந்தன் கழுத்தைக் காண்கையில்
சிலை வடிக்கும் ஒரு சிற்பியும் ஆனேன் ,
உந்தன் விரல்கள் காண்கையில்
முரசொலி கொட்டும் நட்டுவனானேன்
காற்றோடு பறக்கும் உன் கருங்கூந்தலுடன்
சேர்ந்தே பார்க்கிறதே என் இதயமும்
பாவை உன் பரந்த விழிகளில் தெரிந்த
காதல் என்னும் பள்ளத்தில் தெரிந்தே விழுந்துவிட்டேன் நான்...
என்னுள் இருக்கும் கவிஞனுக்கு பிறப்பிடம்
நீதான் என தெரிந்தும் தெரியாத பிள்ளைபோல்
அலட்டி கொள்கிறாய் என்னை
கண்டும் காணாதவள்போல் அல்லவா நடிக்கிறாய்
கதவின் பின்னே ஒளிந்து என்னை ரசிக்கிறாய்
போதுமடி உன் இந்த திருட்டு விளையாட்டு ..
நட்பிற்க்கு அப்பாற்பட்டதான
உன் ஒற்றைப் பார்வையால்
பூமியை இரண்டாய்,
துருவங்களை மூன்ற
பிறைகளை நான்காய்,
திசைகளை ஐந்தாய்,
புலன்களை ஆறாய்,
அறிவை ஏழாய்
மாற்றியமைத்தாய் நீ...
இன்னும் என்னவெல்லா