ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 155
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(http://friendstamilchat.org//newfiles/OVIYAM UYIRAAGIRATHU/155.png)
மரத்தின் கிளையில் கொழுந்தாய் தொடங்கி இலையாய் வளர்ந்து மருந்து காற்று மழை நிழல் உணவு பல உதவிகளை உன்னிடம் இருந்து பெற்று கொண்டு பருவங்கள் மாற பயன்களை தந்து கொண்டு இருக்கிறது காலங்கள் கடந்த பின்பு முதிர்வடைந்து மண்ணில் மடிகிறது..!!!
தாய் வயிற்றில் கருவாகி தந்தை அணைப்பில் உருவாக்கி விடுவிக்கும் வாழ்க்கை என்ற பயணத்தில் பயணிக்கும் பொழுது நட்பின் உதவியில் காதல் தோல்வி கனவாய் கலைந்திட இளம் பருவம் இனிமையாய் முடிந்திட..!!
காலங்கள் நடத்திய போட்டியில் திறமை கயிற்றில் முயற்சியை நிலைநாட்டி வெற்றியை நிலையாகி திருமணம் என்ற பந்தத்தில் உறவாகி உயிருக்குள் உயிர் சேர்த்து சில உறவு எனும் ஜந்துக்கள் சந்தோசமாக இருக்க தாய் தந்தை உணர்வுகளை கல்லாகி கருணை இன்றி காயப்படுத்திய நாட்கள்...
உலக உருண்டை சுழன்று கொண்டே தான் இருக்கிறது நாட்கள் யாவும் அன்றே முடிந்து விடாது காலங்கள் மாறின அவன் பெற்ற பிள்ளைகள் அவனை தூக்கி எறிந்தான்...!!
விடுவிக்கும் வாழ்க்கை விடை தெரிந்து கொள்ள பலவருடங்கள் ஆகிய பின்பு முதிர்வடைந்து மண்ணில் மடிகிறான்...!!!
பிறக்கும் பொழுதும் எதையும் கொண்டு வரவில்லை இறக்கும் பொழுது எதையும் கொண்டு சேர வில்லை இந்த இடை பட்ட காலத்தில் சுயநலம் சூழ்ந்த உலகத்தில் நாம் ஒருவர் மனதில் அன்பும் நட்பும் சேர்க்க முடிந்தால் அதுவே வாழ்க்கை...!!
JesiNa...