பால் நிலா பருவம் தந்த ஆனந்த நினைவுகளே..
ஆண் பெண், சாதி, மதம், ஏழை, பணக்காரன்
எதுவும் தெரியாத கள்ளம் கபடம் இல்லாத
மழலை பருவம் தந்த இனிமையான தருணங்கள் ..
பச்சை பசும் மரத்தடியில் வட்டம் போட்டமர்ந்து
தோழிகள் தோழர்கள் உணவுகளை பகிர்ந்துண்டு
பல்சுவை இனிப்புகளை பறித்து சுவைத்து
வயிறும் மனதும் நிறைந்த பொற்கால நினைவுகள்
ஆறு வயதில் தாய் தந்தையை பிரிந்து விடுதிசென்ற துயரை
எண்ணி எண்ணி மனம் குமுறிய நாட்களவை
தாய் தந்தை பாசத்திற்கு ஏங்கிய எனக்கு ஆறுதலாய் இருந்த
கிருஷ்னராஜ் அண்ணனின் அன்பை எண்ணிப் பார்க்கையில்
என் மனதில் உண்டாகும் நெகிழ்ச்சிக்கு அளவேது.. .
தமிழ் ஆசிரியரின் புது புது கதைகள் கேட்டு கொண்ட ஆனந்தம்
இப்போதும் என் நெஞ்சில் நினைவுகளாய் பதிந்துள்ளது..
கணித ஆசிரியரின் வகுப்புக்கு மட்டம் போட்டு வாங்கிய
அடிகளும் ஞாபகத்தில் இருக்கவே செய்கிறது.
பள்ளியில் நடந்த ஆட்டுவிழா நாடக நினைவுகள் ....அதில்
பஞ்ச பாண்டவர்கள் வேடமணிந்து நடித்த சக மாணவர்ககள்
பார்த்து ரசித்த சக மாணவர்களின் கைதட்டல்கள்
திருப்பி மீட்டுப் பார்க்கையில் மனம் துள்ளிக்குதித்து மகிழ்கிறது .
விடுதி உணவை உண்டு மரத்துப்போன நாவிற்கு
மாதம் ஓரு முறை சுவையான உணவு ஊட்டிய அம்மா வின் அன்பை
எண்ணி எண்ணி மனம் ஆனந்தம் கொள்கிறது..
நான் கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்த என் அருமை தந்தையின்
அன்பை எண்ணி என் இரு விழிகளிலும் கண்ணீர் நிரம்புகிறது..
மழலை பருவம் தந்த மகிழ்ச்சியும் நினைவுகளும்
இறைவன் நமக்கு தந்த மிக பெரிய வரம்..
கோடி ருபாய் கொடுத்தாலும் திரும்ப கிடைக்காதது
பள்ளி பருவம்..தந்த அழகிய சிம்மாசனம்
காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம்
உலகில் எதுவும் நிரந்தரம் இல்லாமலும் போகலாம்
சில நேரங்களில் நடந்ததை விட நினைவுகள் மட்டுமே நிரந்தரம்..
அதன் நினைவுகள் தான் அதிகமாய் சுகம் தரும்...