ஒரு வயது குழந்தைக்கு கூட
தன் காதலை சொல்ல
எத்தனை எத்தனை வசதிகள்
சிரிப்பாய் , மந்திரபுன்னகையாய்
மழலை மொழியின் உளறல்களாய்
விசும்பலாய் , அழுகையாய்
சம்பாஷனைகளாய் , ஸ்பரிசங்களாய்
காலகாலமாய் காதலையே
வாசித்து, அரும் சுவாசக்காற்றாய்
சுவாசித்து வரும் எனக்கோ
கவிதைகளாய் மட்டும் .....
காதல் சொல்ல ....