ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 088
இந்த களத்தின்இந்த நிழல் படம் Paul Walkerஅவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை வியாழக்கிழமை (28.01.2016) GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/088.jpg)
சிந்து சமவெளியில் துவங்கி
ஆசியா வந்தபோது பல வகையினில்
பிரிந்து வந்தாலும் நான் "தமிழன்"
என்ற பெருமையோடு தமிழ் கலாச்சாரம்
பண்பாடோடு வீரத்தையும் விதைத்து
தாய் மண்ணையும் கண் போல காத்து வந்தான்
என் பாட்டனும் பூட்டனும் .,
இயற்கை உணவை சுவைத்த வரை
இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த வரை
தேவைக்கு போதுமென்ற மனம் உள்ளவரை
அயலாரின் தேவையறிந்து உதவிய வரை
கட்டாயமாக வீரம் விதைத்தவரை
எல்லாம் சீராகவும் சிறப்பாகவும் இருந்தது ...
இன்று காலமாற்றத்தால் சீர்கெட்டு அலைகிறது ...
மௌரியனால் வெல்ல முடியாத
என் தமிழினம் கொண்ட வீரம் எங்கே?
மொகலாயனை நுழைய விடாத
தமிழன் கொண்ட ஒற்றுமை எங்கே ?
இன்று அரசியல்வாதிகளிடம்
என் இனம் சிக்கி தவித்து வாழும்
வாழ்க்கை நினைக்கையில்
மனம் வெதும்புகிறது ...
தமிழக மீனவர்கள் அன்னியனால்
சுட்டுக் கொல்லப்பட்டால் கூட
கேள்வி கேட்க நாதி இல்லை .....
ஒரு தமிழினம் அழிவை எட்டியது
நாம் என்ன செய்தோம்
செய்தியை அறிந்தும்
பேசா மடந்தையாக
ஊனமாகி நின்றோம் ...
கரப்பான் பூச்சியைக் கண்டால்
காத தூரம் ஓடும் பெண்கள் ..
நாலு பேர் சேர்ந்து கிண்டலடித்தால்
ஒதுங்கி செவிடர்போல் செல்லும் ஆண்கள் ..
அரசியல்வாதி தவறு செய்தால்
தட்டி கேட்காத பெரியவர்கள்..
எங்கே நம் வீரம் ?மறந்து விட்டதா?
என் மற தமிழா ...!
அடுத்த தலைமுறைக்கு சொத்து
சேர்க்க கற்றுக்கொடுக்காதே ..
போட்டிகள் நிறைந்த உலகமிது..
முன்னோரின் வீரத்தை கற்றுகொடு ..
அவன் தன்னையும் காப்பான் ..
தன் மண்ணையும் காப்பான் ...