உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு
என்று வாழ்ந்த நம் முன்னோர்கள் .,,
அவர்கள் சிந்திய ரத்தத்தில் விளைந்தவர்கள் நாம் ..
அவர்கள் தந்த சிவந்த பூமிதான் இது .,,
இதை காப்பது நமது கடமை .,,
அவர்களின் பாதசுவடுகளில் நாம் கால் பதிப்போம் .,,
அவர்களின் வீரத்தை கற்போம் .,,
அவர்களின் கலையை கற்போம் ..
பாட்டு திறத்தால் விடுதலை வேட்கை ஊட்டிய
பாரதியை நினைவு கொள்வோம் ..
அச்சம் இல்லை! அச்சம் இல்லை !
என்று பாடியே வீறு கொண்டு எழுவோம் !
மௌரியன் என்ன ?மொகல் என்ன?
திப்பு என்ன?வெள்ளையன் என்ன ?
தமிழனின் அடையாளம் தனி அடையாளம் !
நோய் வாய் பட்ட தமிழனை வென்ற கதை
என் சந்ததிக்கு தேவை இல்லை .,,
வீரத்தை சொல்லுவோம் .,,
வென்றதை சொல்லுவோம் .,
என் தமிழுக்கும் தமிழனுக்கும் வீரம் உண்டு
நேர்மையான தமிழன் ., சூட்சினால் வீழ்ந்து போனான்
அன்றும் வீழ்ந்தான் ., இன்றும் வீழ்ந்தான் .,
பழம் கதை பேச நான் வரவில்லை .,,
தமிழனை இழித்தும் பழித்தும் பேசும் சுபாவம் விடு
ஒரு நெப்போலியன் படை நடத்தினான் ..
ஒரு மாலிக்காபூர் படை நடத்தினான் .
ஒரு அலக்சாண்டர் படை நடத்தினான்
ஒரு கிட்லர் படை நடத்தினான் ..
ஒரு செகுவீரா போராடினான் ...
ஒரு பிரபாகரன் போராடினான் .,
என் மண்ணும் ., என் இனமும் காக்க
ஒரு தலைமை வேண்டும் .,,இகழ்ச்சி விடு
தலைமை ஏற்க வா.,, மகுடம் சூட்ட வா !