எங்கோ தூரத்தில்
ஜன்னல் கண்ணாடிக்குப் பின்னால்
வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்
பெண்ணின் இதயத்தில்
பாசி படர்ந்தது போல்
நிசப்தத்திற்கு
பயந்து வீசிய மெல்லிய காற்று
அவள் நெற்றியின்
வியர்வை துளிகளை
முத்தமிட்டது
இருட்டில்
யாரையோ தேடும்
பயந்த மான் போல
கண்கள் படபடக்க
வஞ்சம்,
துரோக
இழைகளை மறந்து
காதலின் துகள்களை
ஒன்றோடு ஒன்று
பிணைக்கிறாள்
வசந்த காலத்தின்
பிற்பகுதியை வரவேற்க
அவள் தயாரானபோது,
அவளுடைய கவனம்
எப்போதும் யாரோ
ஒருவரின்
காலடியில் இருந்தது.
இழந்த இளமையின்
எச்சங்களை
ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு
வயதானவளுக்கு வெளிச்சம்
கொட்டித் தீர்த்தது.
வழியும்
மூச்சுக்காற்றுகள்,
விழுந்த கண்ணீரைப்
சொந்தமாக்கி மறையும்போது
இருளில் பிறந்தவன்
ஏற்கனவே இருளில்
மறைந்திருந்தான்
வயது மூப்பினிலும்
ஆசை தீராதவளின்
ஆன்மா சொன்னது
துரோகத்தின் முடிவும்
ஒரு காத்திருப்பு தான்
***Joker***