FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on September 26, 2020, 05:22:39 PM
-
பாடும் நிலாவே S.P.BALASUBRAMANIAN
(https://i.postimg.cc/j2HF13F3/spb.jpg)
எங்கள் செவிகளில் அதிகம்
ஒலித்தது
உங்கள் குரல்
பல நாட்கள் பல பயணங்களில்
ராஜாவின் இசையுடன்
எங்களுக்கு கூட்டாய்
பயணித்தது
உங்கள் குரல்
எத்தனை எத்தனை
பாடல்கள்
எத்தனை எத்தனை
மொழிகளில்
அத்தனையும்
தேனாய் பாய்கிறது
எங்கள் செவிகளில்
உங்கள் குரல்
பாடலுக்கு
உயிரூட்டி
உணர்வூட்டி
மெருகேற்றி
நடிப்பவர்க்கு
எளிதாக்கும்
உங்கள் குரல்
உங்களை கண்டு
கற்கவேண்டியது
பாட மட்டுமல்ல
உங்களின்
மனிதாபிமான
குணமும் கூட
உங்கள் மறைவு
எங்களுக்கு
பேரிழப்பு
..இதோ இப்பொழுதும்
ஒலித்து கொண்டிருக்கிறது
"நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா"
நீங்கள் பாடிய பாடல்கள் காலத்தை கடந்து
ஒலித்து கொண்டிருக்கும்
என்றும்
எங்கள் செவிகளில்
உங்கள் குரல்
WE MISS YOU SPB
-
நீங்கள் மரணிக்கவில்லை
எங்களுடன் நித்தமும் வாழ்கிறீர்கள்
எங்கள் உயிரில் ஒன்றர கலந்தவர்
நீங்கள் மறையவில்லை SPB Sir
நாங்கள் வாழும்வரை எங்களுடன்
பயணித்துக்கொண்டே இருப்பீர்கள்!!!.
-
RIP SPB sir. You always have the special place in our heart. Nobody is could replace you in our heart. Well love u and we miss you sir. Surely the release of "Annathe song" will make us on tears 💔.
#SPBFOREVER
(https://i.postimg.cc/ZKMQCNGn/FB-IMG-1601172004970.jpg)